தேவர் புகழ்

விடுதலைக்காய் கூட்டங்கள் நடத்தும் போது



விருதுநகர் வீதியெல்லாம் தமுக்கடித்து


அடுக்கடுக்காய் மக்களையே சேர்க்கும் வண்ணம்


அறிவிப்புச் செய்து நின்ற காமராஜை


தடுத்தவரைத் தாக்கி அங்கே கொடுமை செய்தார்


தனம் நிறைந்த நீதிக் கட்சி பணம் படைத்தோர்


அடுத்த நாளே தேவர் மகன் அங்கே சென்றார்


அடித்தவர்கள் ஒரு நாளில் வருத்தம் தன்னை




வெளிப்படையாய்க் கேட்கவில்லை என்று சொன்னால்


விருதுநகர் இருக்காது என உரைத்தார்


அடித்ததிலே பெருமை கொண்டோர் மனம் திருந்தி


அன்றைக்கே மன்னிப்பைக் கேட்டு நின்றார்


கொடுப்பதிலே பெருமை கொண்ட தேவர் மகன்


கொள்கைக்காய் நிற்கின்ற எங்கள் தொண்டர்


வடுவில்லா காமராஜர் தன் வழியில்


வராதீர் வந்தால் நான் வருவேன் என்றார்
 
 
நன்றி : நெல்லை கண்ணன்.
 
_

No comments:

Post a Comment