விடுதலைப் போரின் முதல்வன் யார்?

இக்கேள்விக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை.
மாவீரன் பூலித்தேவன் தான் அவர். ஆனால் இதை மறைக்க செய்யப்பட்ட துரோக செயல்களை பட்டியலிடுவது அவசியம் ஆகிறது.
“திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்னும் சின்னஞ்சிறு பாளையப்பட்டார் தான் முதன்முதலில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டனர்”
“வெள்ளையரை எதிர்த்து முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்
என்று ம.பொ.சி. அவர்கள் முதல் முழக்கம் என்னும் தமது நூலில்((பக்.11) குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே பக்கத்தில்,
“பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் பாளையக்கார்கள் நிகழ்த்திய போர் இன்று உலகும் போற்றுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே தொடங்கி விட்டதெனலாம்” என்று உண்மையை எடுத்துக் கட்டியுள்ளார்.இது உண்மையானால்…
உலகும் புகழும்(!) வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே விடுதலைப் போரை தொடங்கியது யார்?
அவன் தான் மறத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்.
இதை முழுமையாக இருட்டடிப்பு செய்தது ஏன்?
அடுத்து மற்றொன்றும் கூறுகிறார் ம.பொ.சி. அவர்கள்.
“ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி, இந்தியாவிலேயே முதல் புரட்சியாக கிட்டூர் ராணி சென்னம்மாள் விளங்கினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னோடியாக கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிர்ப்பு கிட்டூரில் தான் உருவாகியது” (பக்.18(1) ) [இவர் போராட்ட காலம் 1830-31]
மேலும்,
“விடுதலை போரில் தியாகம் செய்துள்ளவர்களைஎல்லாம் சதி சமய காழ்ப்பின்றி மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியது எனது கடமையாகிறது” (பக்.6)
அவரின் கடமை நிறைவேற்றப்பட்டதா? இது தான் காழ்ப்பின்றி இளையோர்களுக்கு உண்மை வரலாறு அறிமுகம் செய்யும் கடமையோ? விருப்பு வெறுப்பற்ற ஒரு வரலாற்று ஆய்வெனக் கருதமுடியுமோ?
1798ல் தான் கட்டபொம்மன். 1755லேயே வீர முழக்கம் இட்டவன் தானே மறத்தமிழன் மாவீரன் பூலித்தேவன்!
யார் பூலித்தேவன்:
[சிறு குறிப்பு:  தொன்று தொட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்குடி முகவை கிழவன் சேதுபதி அவர்களுக்குப் பிறகு தலைவணங்கா அடலேறு நெற்கட்டான் செவ்வல் குறுநில மன்னன் தென்பாண்டி நாட்டின் தானைத்தலைவன் பூலித்தேவன்.  முகவை ஆப்பநாடு மறவர் சீமை மான மறக்குலத் தலைவர் உயர்திரு. சித்திரபுத்திரத் தேவர் அவர்களுக்கும், சிவஞான நாச்சியார் அவர்களுக்கும் இல் பிறந்தவர் தான். பின்னால் தலைக்காவல் முறையில் நெல்லை மாவட்டம் சென்றார். "இந்திய விடுதலைப் போரின் முதல்வன்" - முனைவர் ந. இராசையா  பக்.30 ]
மேலும் ம.பொ.சி.அவர்கள்,
“1767ல் மேஜர் பிராண்டும்,
1783 ல் கர்னல் புல்லர்டனும் பாஞ்சலங்குறிச்சி மீது படையெடுத்தனர்(பக்.42 )”
“பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தளபதி பானர்மேன் தாக்கியது 5 செப்டம்பர் 1798ஆம ஆண்டு தான்(பக்.42)

1755ஆம் ஆண்டு மே திங்கள் மறத்தமிழ் மாமன்னர் மாவீரன் பூலித்தேவன் கோட்டை முதல் வெள்ளைப்படைத் தளபதி கர்னல் ஹெரான் என்பவனால் தாக்கப்பட்டது என்பது தான் ஆவணச் சான்றுடன் கூடிய வரலாறு.
மேலும் மறுக்கமுடியாத சான்றுகள் ஏராளமுண்டு.
நெல்லை மாவட்ட விவரச்சுவடி1917 , பகுதி 1, பக்-70-73, 81-85, 363-387, 389-408, 403ல் விரிவாகக் காணலாம்.
மேலும் அறிஞா  துர்க்காதாஸ் எஸ்.கே. சாமி கூறுகிறார் “தென்பாண்டி நாட்டுத் தமிழ்ப் பாளையங்களைப் பிளந்து அவற்றினூடே புகுத்தப்பட்ட கம்பளப் பாளையங்கள் தமிழத்தின் நிலா, பெருமை ,வருங்காலம் இவைகளைச் சிறிதும் மதியாமல்-தமிழர்களை அன்னியர்களிடமிருந்திலும் ஆதிக்கதாரிடத்திலும் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்” என்று “தமிழ்வீரன் பூலித் தேவர்” என்னும் தமது நூலில்  பக்-32ல்  குறிப்பிட்டுள்ளார்.
எனவே மாவீரன் பூலித்தேவனுக்கு 46 ஆண்டுகள் பின்னர் வந்த வீரபாண்டியபுரம் கட்டபொம்மன் முதல் முழக்கம் முழங்கியவன் என்பது ம.பொ.சி. நூலின் பக்-6ல் குறிப்பிடப்பட்டுள்ள செய்திக்கு தெளிவான பதிலடி கொடுப்பதாக மேற்கண்ட பத்தி இருக்கிறது.
அரைநூற்றாண்டு காலம் வெள்ளையருடன் வீரப்போரிட்டு தன்மானத்தை நிலை நிறுத்திய மாவீரன் பூலித்தேவனின் புகழை ஏன் பாழ்படுத்தவேண்டும்? என்ற கேள்வியை படித்தோரிடம்  விபரம் தெரிந்தோரிடம் விட்டு விடுகிறோம்.எனவே, நாட்டின் வீரவணக்கத்திற்குரிய வீரர்களை தவறாக ஒரு சில அரசியல்வாதிகள் விளம்பரப்படுத்திய காரணத்தால், சுயநலக்காரர்கள் வரிக்கொடுமையாலும் கொள்ளையாலும் தமிழர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தவர்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களைப் புகழ்ந்து பேசுவதும், மறத்தமிழ் மாண்பை அழிக்கவேண்டுமேன்றே எழுதப்பட்ட எரிபொருளாகும் என்று எடுத்துக்காட்டியுள்ளனர் அறிஞர் பெருமக்கள்.
“அமெரிக்க விடுதலைப் போருக்கும் (1775–1783), பிரெஞ்சுப் புரட்சிக்கும் (1789–1799) முன்னரே  தென்னக விடுதலைக்காக இரத்தம் சிந்திய தியாகத் தலைவன் பூலித்தேவன் அவர்களே”.
1772ல் சின்ன மறவர் நாடு சிவகங்கை சீமையில் வெள்ளைப்படைத் தளபதி வேல்ஸ், அக்னியூ ஆகியோரை எதிர்த்து போரிட்டாரே அரசர் முத்து வடுக நாதத் தேவர்.
பெயர் என்ன இதற்கு?
வட்டுடை அணிந்து வாளெடுத்து வருபகையை எதிர்த்துச் சென்றாரே மறக்குல மங்கை ராணி வேலுநாச்சியார், ஆங்கிலேயர் பிடித்த பகுதியை மறுபடியும் போரிட்டு வென்ற ஒரே பாரத குல வீரப்பெண், தமிழ்மறத்தி.
இதற்குப் பெயர் என்ன?
1766டிசம்பர் 26ல் கொல்லன்கொண்டான் குறுநில மன்னர் மாவீரன் வாண்டையாத் தேவன் கும்பினி படைத்தளபதி பிளின்ட் என்பவனை எதிர்த்துப் போரிட்டாரே. அதற்குப் பெயர் என்ன? மீண்டும் அவர் 1767 ஏப்ரல் 26ல் இரண்டாவது போர் துவக்கினாரே! அது எத்தனையாவது முழக்கம்?
மான மறக்குல வீராங்கனை இராணி வேலு நாச்சியார் அவர்களுக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் மே திங்கள் தளபதி ஹெரான் என்பவனை தாக்கினானே நெற்கட்டான் செவ்வல் பூலித்தேவன். அதற்குப் பெயர் என்ன?
மறத்தமிழ் மக்களின் மகத்தான தியாகங்களை எடுத்துக்காட்டி பெருமிதமும், பெருமையும் அடைய வேண்டுமே தவிர,இருட்டடிப்பு செய்துவிட்டு எடுத்துக்காட்டியுள்ள பகுதி வருமாறு:-
1755க்கும் 44 ஆண்டுகளுக்குப் பின் 1799ல் நாட்டின் சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் தான் விடுதலை இயக்கத்தில் முதல் முதலாக முழங்கியவன் என்று கூறுவதன் உள் நோக்கம் என்ன? சாதரணமாக தவறு நிகழ்ந்து விட்டது எனக்கருத முடியுமோ? தமிழ்க் குலம் தலைகுனிய வேண்டும் என்பதிலே ஆர்வமோ? அல்லது தமிழன் அல்லாத வேறு ஒருவன் என்று வரவேற்கும் பெருமையோ?
அறிஞர்கள் கருத்து:
இந்த தமிழ் துரோகத்தை மறுத்து பல அறிஞர்கள் தம் ஆய்வுக்கருத்துக்களை கூறியுள்ளனர்.
தமிழ்வாணன்
முனைவர். ந.சஞ்சீவி
முனைவர் எஸ்.கதிர்வேல்
எஸ்.கே.சாமி
பேராசிரியர் வானமாமலை
எட்டயபுரம் நா.குருகுகதாசப்பிள்ளை.
சுப்பிரமணியம்.
வ.வேணுகோபால்.
மங்கள முருகேசன்
எஸ். நடராசன் மற்றும் சான்றோர்
பலரது எடுத்துக்காட்டுகள் மலைவிளக்காக காட்சி தருகிறது.
“இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” முனைவர்-ந.இராசையா பக்.18-28ல் தெளிவாகக் காணலாம்.
இவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள். என்றாலும் நம் பெருமையை அடுத்தவர்கள் கூறும் போது தான் நாம் உணரமுடிகிறது.
மேல்நாட்டு அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள்?
திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடி, அறிஞர் பேட்டி, ஐ,சி.எஸ். பக்.70-75, 80-339, 376, 411.
திருநெல்வலி சரிதை, அறிஞர் கால்டுவெல், பக்.92, 376.
இந்துஸ்தான் சரிதை – ராபர்ட் ஓர்ம்ஸ் -பகுதி 1 பக்.400-401, 420, 423, 425 -  பகுதி 2 பக்.100, 109, 112, 116-117, 199-200.
மேலும் அறிஞர் அருட்திரு. கிரான்ஸ், ஏ.ஜே.ஸ்டுவர்ட், எச்.ஆக்பெட் போன்ற மேல்நாட்டு அறிஞர் குறிப்பு – ?
“1799ல் உள்ள ஒருவன் முதன் முதலாக முழங்கியவன் என்று சொல்லுவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறது நாடு?”

இந்தக் கேள்விக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லிதானே ஆகவேண்டும்.
இப்படி எடுத்துக்காட்டிய அறிஞர்கள் ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருப்பதால் தமிழர் கட்சித் தனிப் பெருந்தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஒதுக்கிவிட்டிருக்கலாம்.
என்றாலும் ! மறத்தமிழர் மாவீரன் பூலித்தேவனையும், வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கனையும் சீர்தூக்கிப் பார்த்து, சரியான கோணத்தில் படம் பிடித்துக் கட்டாமல் தமது விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப எழுதி இருக்கின்ற திருப்பணியே தான்:-பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே தலைவனாகப் பட்டம் சூட்டிக்கொண்ட, வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கனைப் போல் குறுகிய எல்லையை வகுத்துக் கொண்டு தான் “முதல் முழக்கம் முழங்கியவன் கட்டபொம்மு தான்” என்று துணிந்து தீட்டியுள்ளார் என்பதை நாம் உறுதியாக கூற முடியுமே தவிர ஆராய்ச்சித் திறன் இல்லாதவர் ம.போ.சி. என்று குறை கூறுவதற்கு நாம் தயாராக இல்லை.
கட்டபொம்மு நாயக்கனின் பாட்டன் பொல்லாப்பாண்டிய நாயக்கன் சுதந்திர விரோதியாக இருந்த நாளிலேயே நெற்கட்டான் செவ்வல் மாவீரன் பூலித்தேவன் தமிழத்தின் விடுதலைப் போரை துவக்கியவன். தனிப்பெரும் புகழ் பூலித்தேவன் என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வீர வரலாறாகும்.- “வீரத்தலைவர் பூலித்தேவன்” முனைவர் சஞ்சீவி.
அடிபணியாத மாவீரன்?
“பாஞ்சாலங்குறிச்சி மாவீரன் வீரபாண்டியன் 39 ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் வாழ்நாளில் ஒரு மணி நேரம் கூட ஆங்கிலேயக் கம்பெனிக்கு அடிபணியவில்லை”
என்று ம.போ.சி. தமது நூலின் பக்-57 பத்தி 1 ல் குறிப்பிட்டுள்ளார். அவர் அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய பெரும் புகழை நாம் பாழ்படுத்த விரும்பவில்லை.
ஆனால்…! உண்மை வரலாறு என்ன? உணர்த்தியாக வேண்டுமல்லவா? தவறான கற்பனைகளை உண்மை போல் சித்தரித்துக் காட்டிய திருப்பணிகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆராய்ச்சித் திறன் அரசியலடிமையாகி விடக்கூடாது.
1798 செப்டம்பர் 5 ல் தான் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை, தளபதி பிளின்ட் என்பவனால் தாக்கப்பட்டது. மீனும் கர்னல் புல்லர்டன் கோட்டையைத் தாக்குகிறான். – “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” – அறிஞர் தமிழ்வாணன் பக்-93.
மாவீரன் மாற்றுருவில் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான்.  கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த வீரபாண்டியன் வீர நடையிட்டான். சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்தான். அந்த இடம் போதுமான பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்த மாவீரன் வேறு வழி நடந்தான்.
புதுக்கோட்டை மன்னரின் ஆட்சிகுட்பட்ட திருக்களம்பூர் முட்புதர்கள் அடர்ந்தகாடு கலியபுரத்தில் பதுங்கி இருந்தான் – “க. கொ” – பக். 208
இறுதியில் கலியபுரத்திலிருந்து கைது ஆனான். தூக்கு மரத்திற்கு அவனைக் கொண்டு வரும் பொது
“வீரநடை போட்டு வந்தான் வீரபாண்டியன்”
அதை ம.போ.சி. அவர்களே தமது நூலின் பக்.56 பகுதி 1 ல்
“கோட்டையை விட்டு வெளியேறாமல் அக்கோட்டையைக் கைப்பற்றும் புனிதப் போரில் வீரமரணம் எய்தாமல் போனேனே.” என்று வருந்தினானாம் மாவீரன்.வீரபாண்டியானே கோழையாக மரணம் என்பதை எடுத்துக் கூறிய பின்னர் மாவீரன், வீரமரணம் என்ற பட்டம் சூட்டியது விவாதத்திற்கு உரிய ஒரு கருப்பொருளை கொண்டு உருவாகியது. உண்மைக்கு மாறானது.
மாவீரன் பூலித்தேவன் பிறந்தது 1914 ஆம் ஆண்டு. அவன் விடுதலைப் போரை துவக்கியது 1755 மே திங்கள்!. இறுதிக் காலத்தில் கூட அவன் கோழையாக தூக்குக் கயிற்றில் தொங்கி உயிர்விடாதவன். இம் மறத்தமிழ் மாவீரன் வரலாற்றை மறைக்க எந்த தமிழ் மகனும் துணிவு கொள்ள முடியுமோ?
“பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03.01.1760 ஆம் ஆண்டு. அவன் பட்டம் ஏற்ற நாள் 02.02.1790. அவன் கொலையாகி தூக்கு கயிற்றில் தொங்கிய நாள் 16.10.1799. அவன் போர் தொடங்கிய நாள் 1798 ல் தான்”எப்படியோ “முதல் முழக்கம் முழங்கியவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தான்” என்று நாம் பாராட்டி விட்டோம். அதற்கு நாமே இழுக்கு உண்டாக்கக் கூடாது என்பது ம.போ.சியின் பெருந்தன்மையாக இருக்கலாம்.ஆனால்….! அது தம்மை நம்பிப் பின்பற்றும் மக்களுக்கு நெஞ்சார இழைக்கப்படும் வஞ்சம் என்று சொல்லுவது தவறாகாது.
மறவர் மாண்பு:
போர்க்கள மறவர் மாண்பு….?  வெற்றி அல்லது வீரமரணம் அவன்தான் போர் மறவனாவான்.  அவன் களத்திலே சாயும் போது கூட இரு கைகளையும் பிடியளவு மண்ணைத் தமது உள்ளங்கைகளில் அடக்கியவாறே குப்புறச் சாய்வான். எதிரியின் கையில் சிக்கி, விலங்கை சுமந்து தூக்கு கயிற்றில் தொங்கி உயிர்விடுபவன் கோழையே தவிர, வீரனாக மாட்டான். அவன் மறவனாக மாட்டான். மறவனாக்குவதும் அறிவுடைய செயலாகாது. “முன்னேற்ற முழக்கம் – தேவர் முரசு” -வி.ஆ. ஆண்டியப்பத் தேவர். (ஆகஸ்ட்) பக். 84 -5-1
மாவீரர்கள்:
வெள்ளையர்களுக்கு திகில் கொடுத்த மாவீரன் பூலித்தேவனை கையில் விலங்கிட்டு செல்ல முடிந்ததோ?
கொல்லங்கொண்டான் மாவீரன் வாண்டையாத் தேவன் அடிச்சுவட்டையாவது வெள்ளையர் காண முடிந்ததா?
சேதுபதி மீது படையெடுத்து வந்த இராமப்பையன் மற்றும் தளபதியார் வாள் சுழற்றி வன்னியத் தேவனை சிறை பிடிக்க முடிந்ததோ?
சின்ன மறவர் நாட்டின் செங்கதிர் மறத்தமிழ் மாமன்னர் பெரிய மருது வெள்ளையரின் வஞ்சகத்திற்குத் துணிந்து வந்தே தூக்குக் கையிற்றை துணையாக்கிக் கொண்டானே தவிர கையில் விலங்கைச் சுமந்து அவன் கோழையாகியது  உண்டோ? கட்டபொம்மு நாயக்கனுக்கு உயிர் பிச்சை அளித்த மாவீரன் வெள்ளையத்தேவன் மார்பிலே வேல் தாங்கி களத்திலே உயிர்விட்டானே தவிர கையில் விலங்கு சுமந்து தூக்குக் கயிற்றில் தொங்கினானா?  இவர்கள் தானே வீரன் , மாவீரன்  என்பதற்கு இலக்கணமானவர்கள். மறத் தமிழ் மக்கள். வரலாற்றுச் சிற்பிகள்.
ஆனால்.
“கோழைகளை எல்லாம் வீரனாக்கியே தீருவேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு பரணிபாடிய ஒரு சிலருக்கு மாவீரன் பூலித்தேவன் உண்மை வரலாறு தெரியாமல் இருக்க முடியாது. சான்றுகள் ஏராளமுண்டு”.
எனவே, தான் செய்த தவற்றை மறைக்க திரும்பத் திரும்பப் பேசியும், எழுதியும் வந்தால் உண்மையாகிவிடலாம் என்ற எண்ணமும் இருக்கக்கூடும்.
உண்மை தியாகத்தையும் உறுதியாக உள்ள வீரவரலாற்றுச் சுவடிகளையும் ஒதுக்கி தள்ளியும், முழுமையாக மறைத்தும், மக்களைக் கொள்ளையடித்து, பொருள் திரட்டி வந்த ஒருவனை
“வீரபாண்டியன் என்று பச்சைக் குத்திக் கொள்வது என்றால் தமிழனுக்குப் பச்சை துரோகம் செய்வதாகும்”
கரும்பு வெட்டியவர் கடித்துண்ண முடியாது கைபிசைந்து கலங்கும் நிலைதானே! எதிகால இளையோர்களும் குருடாகவே இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடையோர் செயலாகாது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே துணிந்து செய்யும் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டோ?
திருச்சி விசாரணை:
கட்டபொம்முவை திருச்சிக்கு கொண்டு வந்து கும்னியர் விசாரணை செய்தனர்.
என்ன சொன்னான் அந்த மாவீரன்(!)?
கூறுகிறது கட்டபொம்முவின் புகழ் பாடிடும் “பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்”  -ஜெகவீரபாண்டியனார் பக்- 130ல் காணலாம்.
அடுத்து:
வீரபாண்டியனின் கழுத்தில் முத்துமாலையை அணிவித்தது யார்?
ஏன் முத்துமாலை பரிசு தந்தனர் கும்பினியர்?
‘கும்பினியாரின் வளர்ப்பு பிள்ளை’ வீரபாண்டியன் என பாராட்டுப் பெற்றது ஏன்?
திரு. எம்.எஸ்.சுப்ரமணிய ஐயர், “வீரபாண்டிய கட்டபொம்மன்” நூலின் பக்.45-46.
ஆசரியர் வி.சே.வீலா அவர்கள்,
“வீரபாண்டிய கட்டபொம்மன்”நூலின் பக்.43, 44
“பாஞ்சாலங்குறிச்சி சரித்திரம்” பக்.132

ஆனால் ம.பொ.சியோ….? என்ன சொல்ல.
வந்தான் ஜாக்சன்:-
ஜாக்சன் இராமநாதபுரத்தில் 1797 மார்ச்சு திங்கள் 10ஆம் நாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்  கொண்டான். வீரபாண்டியனின் நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்தான்.
03.02.1798ல் வரிப்பணம் கேட்டு வீரபாண்டியனுக்கு கடிதம் எழுதினான்.
03.05.1798ல் மீண்டும் கடிதம் எழுதினான்.
23.05.1798ல் பிளைட் என்ற வெள்ளையன் மூலமாக கடிதம் அனுப்பினான்.
18.08.1798ல் கடுமையாக எச்சரிக்கை விடுத்தான் வீரபாண்டியனுக்கு!
என்ன எச்சரிக்கை?
[இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக். 98. நெல்லை மாவட்ட சுவடி பக். 80]
05.09.1798ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்ற ஆணை?என்ன செய்தான் மாவீரன்(!)?
வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? என்று முழக்கமிட்டான? வரிந்துகட்டிக் கொண்டு படை திரட்டினான? பொங்கி எழுந்தானா? போர் முரசும் முழங்கினானா?

மண்டியிட்டான்: “கலெக்டர் ஜாக்சன் செப்டம்பர் 5ல் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டும் என்று ஆணை?”
ஆனால் வீரபாண்டியன் என்ன செய்தான்?
ஜாக்சன் சந்திக்க சொன்ன பலநாட்கள் முன்னதாகவே புறப்பட்டுவிட்டான். அவன் முகாமிட்ட ஊர்கள் தோறும் பின் தொடர்ந்தான். என்பதை தமது நூலின் பக். 46 பகுதி 1 ல்  ம.பொ.சி.அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
ஜாக்சனை சந்திக்க வீரபாண்டியனுக்கு எத்துனை ஆர்வம் ஏன்?
ஏறக்குறைய 23 மைல்கள்
400 நாட்கள்
நாலாயிரம் படைகள் சூழ?[கட்டபொம்மன் பக்.316-317 ந.சஞ்சீவி, இராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி பக். 98. நெல்லை மாவட்ட சுவடி பக். 80]
என்ன உறுதியுடன் நடந்தான்? கையையும் வாளையும் மடக்கி கொண்டு நடந்தது ஏன்?
கொள்ளைக்காரன்:
“இந்த நேரத்தில் கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என்று எவனாவது சொன்னால் அவனைக் குத்தி கிழித்து விடுவார்கள் மக்கள்” என்று “இந்திய விடுதலைப் போரின் முதல்வன்” என்னும் தமது நூலின் பக்.19 ல் முனைவர் ந.இராசையா எடுத்துக்காட்டியுள்ளார்.
“கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” என்று அறிஞர் தமிழ்வாணன் பக்.14 ல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் அத்தகைய வெறியர்கள் அல்ல … என்று ஆதாரங்களை அமைதியாகவே எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.
ஆனால் ம.போ.சியோ ? அவரது வரலாற்றுக் குழப்பத்திற்கு காரணம்?
உண்மையிலேயே அவரது நிலை கழிவிரக்கமானது தான். தமது வாதங்கள் தோற்றுப் போகும் போது ஆத்திரம் எழுவது இயல்புதான்.
அதுவும் உண்மையை மறைவின்றி எடுத்துக்காட்டிய அறிஞர் தமிழ்வாணன் மீது ஏற்படாமல் இருக்க முடியுமா?
உண்மை கசப்பானது தான். அதை யார் சொன்னால் என்ன? சாடுவது நியாயமாகவே கருத  முடியும்.
அவர் மீது அனுதாபமே ஏற்படுகிறது.
மேலும் சிந்திக்க தூண்டுகிறதே தவிர, மறைக்கச் செய்ய முடியவில்லை.
ஏன்? இளைய தலைமுறையினர் மத்தியில் தவறான வரலாறு இடம் பெற்று விடக் கூடாது என்பதாகும்.
இராமலிங்க விலாசம்:
சேது நாட்டில் வரலாறுச் சிறப்பு மிகுந்த இடம். அங்கு நடந்த சண்டை வீரத்தளபதி வெள்ளை தேவனின் வீரகாவியமாகும். இது தான் கோணத்தலவாசல் சண்டை எனப்படும்.ஆனால்… இதை ம.போ.சி அவர்கள் திரித்துக் கூறியுள்ளார். தான் கொண்ட கொள்கைக்கு எந்தப் பகுதியிலும் இழுக்கு உண்டாகதவாறு கண்காணித்து வந்துள்ளார் என்பது தவிர உண்மை வரலாறாக இருக்க முடியாது.
“கலெக்டர் ஜாக்சன் பேட்டி கொடுத்தான். அமைச்சர் தானாபதி பிள்ளையும், வீரபாண்டிய கட்டபொம்முவும்  சென்று பேட்டி கண்டனர்”
“ஒரு மன்னரிடம் காட்ட வேண்டிய மரியாதையை தன்னிடம் காட்டதாதால் சினங்கொண்டு வெளியேறினான் வீரபாண்டியன்” என்று தமது நூலில் பக்.46 பகுதி 1 ல் குறுப்பிட்டுள்ளார் ம.போ.சி.
சினம் கொண்டு வீரபாண்டியன் வெளியேறி இருப்பானேயானால் உடன் வந்த அமைச்சர் கைது ஆனது ஏன்?
கவலை வீசி இருந்தால் எப்படி தானாபதி பிள்ளை கைது ஆகி இருக்க முடியும்? அவரை திருச்சிக்கு ஏன் கொண்டு போனார்கள்?
கமுதிக்கோட்டை:
செப்டம்பர் திங்கள் 5 ம் நாள் கமுதிக் கோட்டையில் தங்கி இருந்த போது என்ன நடந்தது? வாளையும் கையையும் வாளையும் மடக்கி கொண்டே அலைந்த (!) மறவர் படை வாள் நிமிர்த்தியது ஏன்? போர் முழக்கம் செய்தது ஏன்?
“வெள்ளையத் தேவரே என் உறவினர் எல்லோரும் எனக்குப் பகையாகி விட்டனர். நீங்கள் ஒருவர் தான் எனக்குத் துணை! சண்டை வேண்டாம். இப்போது இராமநாதபுரம் சென்று பார்த்துக் கொள்ளலாம் அமைதி வேண்டும்” என்று வெள்ளையத் தேவனிடம் வேண்டியவன் கட்டபொம்மன் தானே?
உண்மையான வரலாறு விளக்கம் சான்றுகளை எடுத்துக்காட்டியுள்ளார் அறிஞர் தமிழ்வாணன் அவர்கள்.
கையெழுத்துப் பிரதி அரசு நூல் நிலையத்தில் இருப்பதாக தமது நூலின் பக்கம் 138 ல் குறிப்பிட்டுள்ளார்.
வரவேற்றான்:

“இராமலிங்க விலாசம் மாடியில் கலெக்டர் ஜாக்சன் முகமலர்ச்சியுடன் கட்டபொம்மனை வரவேற்றான். என்னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து என்னை வந்து பார்த்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லி இருக்கை  கொடுத்தான்.மேலும் கேள்விகளை கேட்கிறான்.
கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு வந்த கட்டபொம்மன், தான் கொண்டுவந்த கப்பப் பணத்தை ஜாக்சன் காலடியில் வைக்கிறான்.
எதிர்பாராத இந்த நிகழ்ச்சியை கண்ட ஜாக்சன் அதிர்ச்சி அடைந்தான்.  ஆயினும் இதை திருச்சிக்கு தெரியப்படுத்துகிறேன். பதில் வர சில நாட்கள் ஆகலாம். அதுவரை இங்கயே தங்குவதற்கு வேண்டியது செய்கிறேன், என்றான்.
இடுக்கிப் பிடியில் அகப்பட்டுக் கொண்ட கட்டபொம்மன் இடத்தை விட்டு, உயிர் தப்பினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். வயிறு வழியாக இருக்கிறது கொள்ளைக்குப் போக வேண்டும் என்றான்.
குறிப்பிட ஒரு இடத்தை அவர்கள் காட்டினர். மாடிப்படியிலிருந்து இறங்கியவன் நேராக வாயில் நோக்கி ஓட்டமெடுத்தான். கூக்குரல் எழுப்பினர் காவலர்கள். வாயிலில் நின்ற லெப்டினன்ட் கிளார்க் ஓடிவந்து தடை செய்தான்.
கூக்குரல் கேட்டதும் கோட்டைக்கு வெளியே தயாராக இருந்த வீரர்கள் பாய்ந்து சென்றனர். கோட்டை வாயில் நோக்கி, தடை செய்த கிளார்க் என்பவனை கைவாள் கொண்டு வீசினான் மாவீரன் வெள்ளையத் தேவன். கட்டபொம்மன் விடுபட்டு வெளியே வந்தான்.
சின்னக் கடை வீதி:
வீரபாண்டிய கட்டபொம்முவுக்கு தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆத்திரம் அடைந்தான். அதை இராமநாதபுரம் கடைவீதிகளில் காட்டினான். வீதியில் சூறை ஆடிய வீர விளையாட்டுக்கள், நடந்த கொள்ளைகள் பற்றிய நாடோடிப் பாடல்கள் ஏராளமுண்டு. ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கட்ட முடியும் என்பதை “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” நூலின் பக்.170-172 ல் விரிவாகக் காணலாம்.
ஆனால் ம.போ.சி. கூறுகிறார்
“வீரபாண்டியன் குதிரைமேல் ஏறி தப்பிவிட்டான்”
என்பது, சின்னக்கடை வீதியின் திருவிளையாடல்களை மறைப்பதற்காகவே  வரலாறு திசை திருப்பிவிடப் பட்டுள்ளது என்ற உண்மையை விளக்கியாக வேண்டும்.
என் தந்தை (மை பதர்)
இராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் ஜாக்சனின் இடுக்கிப் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சியில் பெருவிழா நடத்தினார்.
ஏன்? வீர வெற்றி விழாவா?
சின்னக்கடை வீதியில் தாம் நடத்திய் வீரத் திருவிளையாடல்களின் பூரிப்பு விழாவா?
இல்லை! இல்லை!!
வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு விழா!
கடமையைச் செய்த தளபதிக்கு பாராட்டு விழா ஏன்?
பாராட்டு மட்டுமா, உயர் பட்டமும் வழங்கப்பட்டது ஏன்?
கோட்டை வாசலில் தன்னைத் தாக்க வந்த வெள்ளைப் படையின் துணைத்தளபதி கிளார்க் தலையைக் தமது கைவாள் கொண்டு துண்டித்துத் தமக்கு உயிர்பிச்சை கொடுத்த வீரத்தளபதி வெள்ளையத் தேவனுக்கு பாராட்டு, அவனது வீரதிர்க்குரிய பட்டம் சூட்டும் விழா தான்.
என்ன பட்டம் சூட்டப்பட்டது? வெள்ளையர்களை, சூழ்நிலையால் எதிர்த்து நின்ற கட்டபொம்மன் டச்சுக்காரர்களிடம் அணுக்கமான உறவு வைத்திருந்தான் என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டின் இக்கட்டுரை விரியும். அவர்களது அடிச்சுவட்டை பின்பற்றினான்.
டச்சுக்காரர்கள் தங்களது மதகுருக்களை ஃபாதர், தலைவன், தந்தை என்று தான் அழைத்து வந்தனர். அதையே கைகொண்டான்.
சின்னக்கடை வீதியின் நிகழ்ச்சியால் வேதனையில் உழன்று கொண்டிருந்த மறவர் வீரர்களைச் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற தமது நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார் கட்டபொம்மன்.
தன்னுயிரை பாதுகாத்த வீரத் தளபதியை ‘மை ஃபாதர்’, ஏன் தலைவன், ஏன் தந்தை என்று பட்டம் சூட்டினான்,
நன்றி மறவாத செயல் அது மட்டுமல்ல.
இந்த உண்மையைத் தெளிவுபடுத்திக் கொண்ள்ள நெஞ்சழுத்தம் அதிகம் வேண்டும்.
‘மை ஃபாதர்’ என்பது மக்கள் பேச்சு வழக்கில் சாதரணமாக பாதர் வெள்ளை என மாறிவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும்
பாண்டித்தேவன் கொலை:
திருவைகுண்டதிலுள்ள கும்பினியாரின் தாணியக்கிடங்கு கொள்ளையடிக்கப் பட்டது ஏன்?
காவலாரக இருந்த மாவீரன் பண்டியத்தேவனை கொலை செய்தது யார்?
தம்பியின் திருமனதிர்க்கும், தானாபதிப் பிள்ளை மகன் திருமனதிர்க்கும் கும்பினியர் தானியக் கிடங்கு கொள்ளை?
அதைத் தடுத்த திரு. பாண்டியதேவர் கொலையும் ஆகா வேண்டுமோ?
செதூரிளிருந்து கடத்தி வந்த சிவகிரிப் பெயரார் கொலை அனது ஏன்?
இவைகளுக்கெல்லாம் தெளிவான விளக்கம் தேவையாகும்.
இத்தகு செயல்களுக்கு மாவீரன் என்ற பட்டம் சூட்டப்பட்டால், உண்மையான வீரம் தலை குனியத் தான் வேண்டும்.
நடிப்பு தான்:
விடுதலை இயக்கத்திற்கு முதன் முதலாக விட்தொன்றிய மறத்தமிழர் மாமன்னர் பூலித்தேவனின் வீர வரலாற்று அடிச்சுவட்டையே இருட்டடிப்பு செய்துவிட்டும்; சூழ்நிலையால் வெள்ளையரை எதிர்த்த கட்டபொம்முவை மாவீரன், முதல் முழக்கமிட்டவன் என்றும் பட்டம் சூட்டிய புதிய கதையாக அமைந்திருக்கலாம்.
ஆனால்…
மறத்தமிழ் மக்களின் மகத்தான தியாகங்களை அழித்துவிட்டு எழுதி இருப்பது உண்மை வரலாறு என்று மக்கள் ஒப்புக் கொள்ள முடியுமோ?
எனவே, அதை மறைப்பதற்கும், கதையை உறுதிப்படுத்தி கொள்ளவும் திரைப்படமாக்கப் பட்டது. வீரப் பரம்பரையில் வந்த ஒருவர், பல பதக்கங்கள் பெற்ற சிவாஜி கணேசன் பயன்படுத்தப்பட்டார்.
அவரது நடிப்பு திறமையால், தவறான ஒரு வரலாறு நாட்டிலே உண்மை போல் சித்தரித்துக் காட்டப்பட்டது. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதர்க்காகவே பிறந்தவன் என்னும் உரிமையும் ஆக்கப்பட்டுவிட்டது.

கோழையை வீரனாக்கிய பெருமை சிவாஜியின் நிடிப்புத் திறமையே.  தவறான திசை திருப்பப்பட்டதே தவிர வரலாறு நாயகனுக்கு அல்ல.
வரலாறு புரட்டு:

கவிஞர் கண்ணதாசன் சொல்லி இருக்கிறார்களே! “சரித்திரத்தை மாற்றுகிறவன் வரலாற்றுப் புரட்டன்” என்று. வரலாற்றுப் புரட்டும், வஞ்சகமும் தமிழர் வரலாற்றுக் காலம் முதற்கொண்டே உடன் பிறந்ததாயிற்றே!
இத்தகு வரலாற்று புரட்டுக்கு அறிவின் முதிர்ச்சி என்று பட்டம் சூட்டுகிறார்களே!   வாய்மையினை   உயிரோடு கொண்ட இளங்கோ அடிகளின் சிறப்புக் கூறியவர், வழி தவறுவது முறையோ? மறத்தமிழன் பூலித்தேவன் வெற்றிகளை எல்லாம் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் மேல் ஏற்றியது ஏன்?
இது ஆழ்ந்து அகன்ற அறிவின் முதிர்ச்சியின் தீர்ப்பு என்று என்ன முடியுமோ? திரிபு வாதத்தின் உச்சகட்டம் ஆகும் என்றால் தவறாகுமோ?
காய்தல் உவர்த்தல் இன்றி வரலாறுகளை, உண்மைகளை நடுநிலை நோக்கோடு ஆய்ந்து வெளியிட வேண்டுவது தாமே வரலாற்று ஆராய்ச்சியாளன் கடமை. அது தானே வரலாறு. வரலாற்று வல்லுனர்களின் கடமையாகும்.
இதில் வரலாற்று ஆசிரியர் ம.போ.சிவஞான கிராமணியார் எந்த வகை? என்று புரிந்து கொள்ள இயலவில்லை.
இத்துணை எதிர்ப்புகளையும், மறுப்பு நூல்களையும் கண்டும், கேட்ட பின்னரும், மௌனம் சாதிப்பது என்றால்…? அதைத் தாங்கி கொள்ளும் தனித்திறன் பாராட்டுக்குரியதாகும்.
அந்தத் திறமையை தந்தை பெரியார் பாராட்டிப் பட்டமும் கொடுத்துள்ளார்கள். “எதிரிகளின் ஒற்றர்” என்ற பண்பாளர் தான் ம.போ.சிவஞான கிராமணியார்.
அரசியலையே விலைச் சரக்காக அடமானம் வைத்து விட்டு தி.மு.க.ஆட்சிக் காலத்தில் மந்திரிப் பதவி கிடைக்கிறதோ என்று நாக்கில் எச்சில் சொட்டக் சொட்ட நின்று, நெஞ்சிலே ஈரம் வற்றிப் போன காரணமாக இருக்கலாம் என்று குறை சொல்ல வேண்டும் என்பது எனது (திரு. வி.ஆ.ஆண்டியப்பத் தேவர்) எண்ணம்.
சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைக்க முடியுமோ? நரி நக்கி கடல் வற்றி விடாது. ஈ குடித்து எருமைப்பால் வற்றாது என்று ஒதுக்கி விடலாம்.
என்றாலும் கூட……..!
கலைஞர் கூறுகிறாரே! தமிழினத் தானைத் தலைவன் தன்மானச் செம்மல்!? மூச்சிலும் பேச்சிலும் முத்தமிழ் மனம் கமழச் செய்யும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் எழுதியுள்ளார்களே,  கலங்காமல்  இருக்க முடியுமோ முதுகுடி மக்கள்.
ஆயிரமாயிரம் ஈட்டிகள் அவர்கள் நெஞ்சிலே பாய்வது போலல்லவா இருக்கிறது.
உண்மை நிகழ்ச்சிகளை எல்லாம் ஒளிவு மறைவின்றி (!) (ஆச்சர்யம் என்னுடையது) உலகிற்கு வெள்ளிடை மலை போல் எடுத்துக்காட்டி வரும் காலக் கண்ணாடியாம் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய குங்குமம் இதழ் “நெஞ்சுக்கு நீதி” என்ற கட்டுரையில் “முதன் முதலாக விடுதலை முழக்கமிட்டவன் வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற எழுத்தோவியம் வஞ்சமனப்பான்மையில் வழிதவறிச் சொல்லும் வரலாற்றுப் புரட்டர்களும் நெஞ்சு நிமிர்ந்து விடுவார்களே ? சரித்திரக் கொளைஞர்களுக்கும் நெஞ்சுக்கு நீதி புகட்ட வேண்டுவதும், காழ்ப்பு உவர்ப்பின்றி நடுநிலை நோக்கோடு நாலராயும் பண்பையும் எடுத்துக்கட்ட வேண்டுமே  தவிர புரட்டர்களுக்கு ஊன்று கொள்ளகி விடக்கூடாது. மேலும்…!
கலைஞரே எழுதிவிட்டார் என்று வீரம் விளைவித்த மறத்தமிழ் மக்கள் வரலாறுகளை எல்லாம் அளிக்கும் துணிபை வளர்த்துவிடக் கூடும் என்பது தான் மக்களது கவலையாகும்.
(இந்நூலாசிரியர் குங்குமத்தை படித்து விட்டு ஆதங்கப் படுகிறார். ஆனால் நானோ நெற்கட்டான் செவ்வலில் பூலித்தேவன் நினைவிடத்தில் கலைஞர் பொறித்த வசனத்தையும், அதே கலைஞர் சென்னை கோட்டையில்  2008 சுதந்திர தின விழாவில் (தேவர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும் பொழுது) பேசிய பேச்சையும் நேரில் கேட்டவன். அது என்னவென்றால் “இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்டபொம்மன், தீரன் சின்னமலை, .__ __ __ __ பூலித்தேவன் . . . . . . . . .  . . .” என்று. என்ன சொல்ல….?)


ன் எழுதினார்?

“நான் மீண்டும் பிறப்பதற்கே விரும்புகிறேன். அதுவம் தமிழ்நாட்டில்; தமிழ் நாட்டிலேயும் கலைஞருடைய தோழனாக இருந்து, தமிழுக்கு வாழ்வு தேடுகிற நிலையையே விரும்புகிறேன்”
(இன்னொரு முறையுமா??????)

என்று தாம் எழுதிய ஒரு புத்தகத்தில் ம.போ.சி. எழுதி இருக்கிறாரே. அந்த அனுதாப அலைகளாக இருக்குமோ என்று ஐயப்பாடும் நமக்கு எழவில்லை. ஆனால்….!
கற்பனை கட்டுரையில், உணர்ச்சியையும் வீரவேசத்தையும் தூண்டி எழுதினால் மட்டும் உண்மை ததோக் கருவூலமாகி விடுமோ?
கடமை என்ன?
அடையாளம் தெரியாத இடத்தில நாலரை ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் 7 இலட்சம் வெண்பொற்காசுகள்  செலவிட்டு கொட்டை கட்டப்பட்டுள்ளது. (பாஞ்சாலங்குறிச்சியில்)
அதை ஏன் என்று கேட்க நாம் முன்வரவில்லை. மக்கள் வரிப்பணம் தானே! நமது கேள்வி:
மாவீரன் பூலித்தேவன் ஆட்சி செய்த அரண்மனை இருக்கிறது. அவன் அமர்ந்திருந்த கருங்கல் சதுக்கம் இருக்கிறது. இடிபாடுகளுடன் காணப்படும் பெரிய கோட்டைகள் இருக்கிறது. அன்னை ஆவுடை நாயகி கோவிலில் வழிபாடு செய்த அறையும் இருக்கிறது. (1986 ல் கேட்கப் பட்ட கேள்வி இது, இப்பொழுது கட்டப்பட்டு அது பாட்டுக்கு இருக்கிறது!!!)
இத்துணை சான்றுகள் இருக்கின்றன. அதச் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கடமை யாருடையது?”மங்கை சூதகமானால் கண்கியில் மூழ்கலாம், கங்கையே சூதகமானால்…! எங்கே பொய் மூழ்குவது? என்ற தெய்வீகத் திருமகனார் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.
துரோகம்:
எனவே, நாட்டுக்காக பாடுபட்டு நல்லுயிர் ஈந்த பெரியோர்களை முறையாக அடையாளம் கண்டு, இளைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் உண்மை நிகழ்சிகளை வரலாறுகளை எடுத்துக் கூறுவது தான் முறையாகும். நடுநிலை நோக்கோடு அரசு நீதியை  நிலைநாட்டும் நேர்மை துலங்கும் படி செய்யும் என்று நம்புவோமாக.
தரங்கெட்ட ஏடுகள்:
மேலும், வழிப்பட்டுக்குரிய மாவீரர்களை எல்லாம் மறைப்பதும், வழிப்பறிக் கொள்ளையர்களைப் போற்றுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவது தவறாகுமோ?
நாட்டின் மானம் காத்த உயிர்த் தியாகம் செய்த மான மறத்தமிழ் மக்களை மறைத்து விட்டு, நாடோடியாக வந்து வயிறு வளர்க்க வந்த, மக்களை கொள்ளை அடித்து, வரிவசூல் செய்பவர்களை வாழ்த்துவதற்கு நமது நாவையும், வரிவரியாய் புகழ்ந்து எழுதுவதற்கு நமது கையையும் பயன்படச் செய்வது தாய் நாட்டிற்கு செய்யும் துரோகமுமாகுமல்லவா?
மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சியை உருவாக்கிக் காசுகள் பெரும் எச்சில் ஏடுகள் சில! முதல் முழக்கம் முழங்கியவன் கட்டபொம்மன் என்று தரங்கெட்ட புரட்டு ஏடுகளைச் சான்று காட்டிப் பணத்தை அறுவடை செய்து கொள்கின்றனர். வரலாற்று உண்மைகளை எடுத்துக்கட்ட வேண்டியது ஏடுகளின் கடமை. அதை மறந்து கவர்ச்சியில் கை நிறைய காசு சேர்த்துக் கொள்கின்றனர். வரலாறு பற்றி என்ன கலவை. காசு எப்படி வந்தால் என்ன?
பாதாளச் சிறை:
தளபதி பானர்மென் பாஞ்சை கோட்டையைக் கைப்பற்றிய போது அங்கிருந்த பாதாளச் சிறையை கண்டான்.
அங்கே குரும்பூர், மாநாடு என்னும் ஊர்களிலிருந்து  சில பெரியவர்களை கட்டபொம்மு கடத்தி வந்து, பலவந்தமாக தூக்கிவரப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். தங்களை மிருகங்களினும் கேவலமாக நடத்தி வந்தனர் என்பதைத் தெரியப் படுத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் கொடுத்த வாக்கு மூலம் அரசு பதிவேடு (ரிக்கார்ட்) அலுவலகத்தில் இருக்கிறது என்று அறிஞர் தமிழ்வாணன் தனது நூலின் பக்.140 எடுத்துக்காட்டியுள்ளார்.
எழுச்சி பெற வேண்டும்:
எனவே, வீரர்களை அடையாளம் கண்டு வழிபடுதல் வீரர் வழிச் சந்ததினரேயாவர். ஆயிரமாயிரம் அறிய கருத்துக்களை, தியாக வீரர்கள் வரலாறுகளை எல்லாம் தேடிக் கொணர்ந்து தமிழக வரலாற்று உண்மைகளை தூண்டித் துருவி ஆராய்ந்து, நிகழ்ச்சிகளுக்குத் தகுந்தவாறு நினைவாஞ்சலி செய்ய வேண்டும். இனமான உணர்வு பெற வேண்டும்.
அன்று தான்……..!
உண்மை வரலாறுகளை அழிக்க எண்ணித்  திட்டமிட்டு வரலாறு புரட்டர்களை அடையாளம் காணமுடியும். எழுதுங்கள் உண்மை வரலாறு. உடலிலே உதிரம் வற்றும் வரையிலும் ஓயாமல் எழுதுங்கள். தவறினால் தேசிய மக்களது வரலாறுகள் முழுமையாக அளிக்கப்பட்டு விடும் என்பது உறுதி.  அடிச்சுவடு கூடத் தெரியாத நிலையில் இளையோர்கள் அவதிப்பட நேரிடும்.
அன்று மாவீரன் பூலித்தேவரின் , வீர முரசுகள், எழுப்பிய சுதந்திரக்குரல்கள், ஏற்றிவைத்த சுதந்திரச் சுடரொளி நீருபூத்த நெருப்பாக இருந்தது. அது தான் 1947 ஆகஸ்ட் புரட்சி விடிவெள்ளி. ஒவ்வொரு தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் பதிய வைக்க வேண்டியதாகும்.
எனவே விடுதலைக்கு முதல் முழக்கம் முழங்கிய மாவீரன் பூலித்தேவரது வரலாறுகளை பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையிலும் மாணவர்களுக்குப் படமாக்கப் படவேண்டும்.
வாழ்க! வாழ்க!! உத்தம தியாகிகள் புகழ்!!!


நன்றி : http://thevar.co.இன்
 
 
 
....

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், ” புனித சேது காவலன்” என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப் படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ் புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும் மிகுதியானவை.
இத்தகைய புகழுக்குரிய வரலாற்று நாயகர்களான சேதுமன்னர்கள் இந்திய நாட்டு விடுதலை வேள்வியிலும் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்று இருப்பது நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றது.
இன்றைக்கு இருநுhற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக வரலாற்றைத் தடம்புரளச் செய்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனம். அப்பொழுது இந்திய nhரரசாக விளங்கிய ஜஹாங்கீரின் அனுமதி பெற்ற இந்நிறுவனத்தினர் குஜராத்திலும், வங்காளத்திலும் தங்களது பண்டகசாலைகளை அமைத்து வாணிபத்தில் ஈடுபட்டனர். பின்னர் மசூலிப்பட்டிணத்திலும், சென்னையிலும் தங்களது நிலைகளை வலுவுடையதாக்கிக் கொண்டனர். அடுத்து, வாணிகத்திற்குப் புறம்பாக உள்நாட்டு பூசல்களிலும் தலையிட்டுத் தங்களுக்குப் பயனளிக்கும் கட்சிக்காரர்களை முழுக்க முழுக்க ஆதரிப்பவர்களாக விளங்கி வந்தனர்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது மதுரை நாயக்க மன்னரது மறைவிற்குப்பிறகு கப்பத்தொகையினை யாருக்கும் கொடுக்காமல் சுயாதீனமாக இயங்கி வந்த தென்னகப் பாளையக்காரர்கள் நவாப்முகம்மதுஅலிக்குக் கப்பத்தொகை கொடுக்க மறுத்தனர். அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களிடமிருந்து கப்பம் பெறுவதற்குப் பரங்கியரது கூலிப்படை நவாப்பிற்கு உதவியது. இந்த வகையில் நவாப் முகம்மது அலி, கும்பெனியாருக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகை கூடிக் கொண்டே சென்றது. பாளையக்காரக்களைத் தவிர , அப்பொழுது தென்னகத்தில் திருவாங்கூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய பரம்பரைத் தன்னரசுகளும் இயங்கி வந்தன. இவர்களிடமிருந்தும் கப்பம் பெறும் உரிமை தமக்கு உள்ளது என வலியுறுத்திய நவாப், கும்பெனியாரது படைபலத்தைக் கொண்டு திருவாங்கூர், தஞ்சாவூர், மன்னர்களை இணங்க வைத்தார். புதுக்கோட்டை மன்னர், நவாப்பிற்கும், கும்பெனியாருக்கும் பலவிதத் தொண்டுகளைச் செய்து வந்ததால் அவரிடம் மட்டும் கப்பம் கேட்டு நிர்பந்திக்கவில்லை.
ஆனால் மதுரை நாயக்க மன்னர்களுக்கே திறை செலுத்தாமல் தன்னரசாக இருந்து வந்த மறவர் சீமை மன்னர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் திறை செலுத்த ஆணை பிறப்பித்துத் தவணை கொடுத்துப் பணம் செலுத்தக் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை என நவாப் முகம்மது அலி முடிவிற்கு வந்தார். ஆதலால் அவர்களையும் ஆயுத வலிமை கொண்டு அடக்கிக் கப்பத் தொகையினைப் பெற வேண்டும் ! நவாப்பினது மகன் உம்தத்துல் உம்ரா, கும்பெனித் தளபதி ஜோசப் சுமித் ஆகிய இருவரது தலைமையில் திடிரென 29.5.1772 ஆம் தேதி பெரும்படை மறவர் சீமைக்குள் புகுந்து தலைநகரான இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி வளைத்தது. இராமநாதபுரம் சேதுபதி மன்னராக இருந்த பன்னிரண்டு வயது நிரம்பிய இளவல் முத்துராமலிங்க சேதுபதிக்காக அவரது தாயார் முத்து திருவாயி நாச்சியாரும் பிரதானிபிச்சப் பிள்ளையும் நிர்வாகத்தை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ரா, ராணியாருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ராணியார் ஆற்காடு நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்கவும், அவருக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதையும் மறுத்துவிட்டார். இராமநாதபுரம் கோட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பேய்வாய்ப் பீரங்கிகள் கோட்டை மீது நெருப்பைக் கக்கின. அக்கினி மழையில் நனைந்த கோட்டைச் சுவரின் கிழக்குப்பகுதியில் இரண்டாம் நான் போரில் ஏற்பட்ட பிளவின் ஊடே பரங்கியர் கோட்டைக்குள் புகுந்தனர். அரண்மனை வாயிலில்நடைபெற்ற வீரப் போரில் மூவாயிரத்திற்கும் மிகுதியான மறவர்கள் தாயகத்தை காக்கும் தொண்டில் தங்களது உயிரைக் காணிக்கையாகத் தந்தனர் என்றாலும் போப்பயிற்சியும் கட்டுப்பாடும் மிக்க பரங்கியருக்கே வெற்றி கிடைத்தது.
ராணியும் அவரது இருபெண்குழந்தைகள், சிறுவன் சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுத் திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். சேதுபதி சீமையில் ஆற்காடு நவாப்பின் ஆட்சி, பரங்கியரது பாதுகாப்பில் நடைபெற்றது. குழப்பம் அராஜகம், கலகம் இவைகளுக்கிடையில் கிடைத்தது ஆதாயம் என நவாப் எண்ணினார். என்றாலும் இராமநாதபுரம் சீமையில் தெற்கிலும், வடக்கிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் நவாப்பின் நிர்வாகத்தை அலைகழித்து அச்சுறுத்தின. ஆதலால் இராமநாதபுரம் சீமையின் மீதான தமது பிடிப்பை முழுமையாக இழந்துவிடாமல் தக்க வைத்துக் கொள்ள நவாப், சேதுபதி மன்னருடன் சமரச உடன்பாடு ஒன்றினைச் செய்து கொண்டு சேதுபதி மன்னர் இராமநாதபுரத்தில் தமது ஆட்சுயைத் தொடர கி.பி. 1781 -இல் வழிகோலினார்.
தொன்று தொட்டு மறக்குடி மக்களது தன்னரசாக விளங்கிய சேது நாட்டின் தன்னாட்சி உரிமையைப் பறித்துச் சேதுநாட்டை ஆக்கிரமிதத்துடன், தன்னையும் தமது டும்பதிதினரையும் பத்து ஆண்டுகள் திருச்சிக் கோட்டையில் அரசியல் கைதிகளாக அடைத்து வைத்து, அவல வாழ்க்கையை அனுபவிக்கச் செய்த நவாப்பையும், அவரது ஏவலரான கும்பெனியாரையும் பழிவாங்கச் சேதுபதி மன்னர் துடித்தார். இடைஞ்சல் ஏற்படுத்திய எவரையும் யனை மறப்பது இல்லை அல்லவா?
நாட்டின் பாதுகாப்பை வலுவுள்ளதாக்கினார். திருவாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிச் சீமைப் பாளையக்காரர்களுடன் நல்ல நேச உறவுகளைக் கொண்டிஐந்தார். சேதுநாட்டின் நவாப்பின் பேரரசையும், கும்பெனியாரது ஏகாதிபத்திய நிழலையும் படரவிடாமல் தடுக்க, டச்சுக்காரiர்களுடன் உடன்பாடு செய்து கொண்டு அனைறைய போர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரிய பீரங்பிகளைத் தயாரிக்கும் ஆயுதச் சாலையை இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் தொடங்கினார்.
சேது நாட்டில் இயங்கிய அறுநுhறு தறிகளில் நுhற்று ஐம்பது சேதுபதி மன்னரது குத்தகைக்கு உபட்ட தறிகளாக இருந்தன. புதுச்சேரி பிரஞ்ச்சுக்காரர்களும் தரங்கம்பாடி டச்சுக்காரர்களும், சேது நாட்டின் கைத்தறித் துணிகளை விரும்பி வாங்கி வந்தனர். இதனால் சேதுபதி சீமையில் போர்ட்டோ நோவா பக்கோடா என்ற டச்சுப் பணம் பரவலாக நாணயச் செலவாணியில் இருந்தது. இதற்காக உள்நாட்டுச் சுழிப்பணம் அல்லது சுழிச்சக்கரத்திற்கு மாற்றிக் கொள்ளும் நாணயச் செலவாணி நிலையங்களை இந்த மன்னர் நிறுவியிருந்தார்.
சேதுநாட்டு இஸ்லாமியர் எதிர்க்கரையில் உள்ள இலங்கை மற்றும் கீழ்த்திசை நாடுகளிலும், உள்நாட்டிலும் வாணிபத்தைப் பெருக்கச் சலுகைகளை செய்து கொடுத்தார். சேது நாட்டு சங்கு வங்கத்திற்கும், அரிசி, நெல், இலங்கை, புதுச்சேரிக்கும் அனுப்பப்ட்டன. கேரளத்து மிளகும் கொப்பரையும் சேது நாட்டில் விற்பனையாயின.
சேதுநாட்டு அரிசி, கருப்புக்கட்டி, எண்ணெய், கைத்தறி ஆகியவைகளின் விற்பனைள்கௌ அரசுத்தரப்பில் வியாபாரத்துறை ஒன்று தனியாகச் செயல்பட்டது.
அடிக்கடி சேதுநாட்டின் பொருளாதாரத்தைச் சிதைத்த வறட்சியை நிரந்தரமாக ஒரீக்க ஒரு திட்டத்தை தீட்டினார். மதுரைச் சிமை வருஷநாட்டில் உற்பத்தியாகி இராமநாதபுரம் சீமையில் நுழைந்து கிழக்குக் கடற்கரையில் சங்கமமாகும் வைகை ஆற்றின் ஒரு பகுதி நீர் வருஷநாட்டு மலையில் உள்ள ஒரு பாறையால் தடுக்கப்பட்டு, கிழக்கே வருவதற்குப் பதிலாக மேற்கே சென்று கேரளக் கடலில் வீணாவதைத் தடுத்து ஆற்றின் முழுநீரையும் மறவர் சீமைக்குள் கொண்டு வருவதற்கான திட்டம் அது.
இவ்விதம் நாட்டின் நலனையும், பொரளாதார முன்னேற்றத்தையும் பெருக்கும் வகையில் இந்த அளம் மன்னர் ஈடுபட்டிருக்கும் காலத்தில் தமிழக அரசியலில் அவர் எதிபாராத திருப்பம் எழுந்தது. இது மனனரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது மட்டுமல்லாமல், தமிழகத்தின் அரசியலில் வெள்ளைப் பரங்கியரது ஆதிக்கத்திற்கு வலுவான அடித்தளமாக ஏகாதிப வளர்ச்சி உருவாக, அந்தத் ப்பம் திiமாறியது.
ஆற்காடு நவாபின் இறையான்மைக்கு உட்பட்ட தமிழகத்தில், அவரது சலுகைகளை எதிர்பார்த்துத் தங்களது கணிகத்தைத் தொடர்ந்து வந்த வெள்ளையர், கும்பெனியாரிடம் கடனாளியாகிவிட்ட ஆற்காடு நவாப்பிற்கு நிபந்தih விதித்து ஆட்டிவைக்கம் சூத்திரநாயகிவிட்டனர். நவாப்பின் அதிகாரத்தைப் பாளையக்காரர்களிடம் அமல்படுத்தத் தங்களது கூலிப் படையைக் கொடுத்து உதவிய கும்பெனியாருக்கு நன்றிக்கடனாக முதலில் கி.பி. 1783-இல் செங்கை மாவட்டத்தை விட்டுக் கொடுத்தார் நவாப். அடுத்து திருநெல்வேலி சீமையில் நிலத்தீர்வை ளை நவாப்பின் சார்பாக வசூலிக்கும் உரிமை பெற்றனர். பின்னர் தென்னகத்தில் நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய வரவினங்கள் அனைத்தையும் வசூலித்துக் கொள்ளும் உரிமையையும், அதில் ஆறில் ஒரு பகுதியை நவாப்பிற்கு அளித்து விட்டு எஞ்சியதை நவாப்பின் கடக்காக வரவு வைத்துக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்க் கோட்டை கொத்தளங்களையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றனர். மேலும் நவாப் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையைத் குறிப்பிட்ட பத்து தவணை நாட்களுக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும். தவணைப்படி பணம் செலுத்தத் தவறினால் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நெல்லுhர், வடஆற்காடு, பழநாடு, ஓங்கோல் சீமைகளின் வரி வசூலைக் கும்பெனியாரே மேற்கொள்ளலாம். இரண்டாவது தவணையிலும் தாமதம் ஏற்பட்டால் அந்தச் சீமைகளை கும்பெனியாரே நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்ற சலுகைகளையும் பெற்றனர். இவைகளைத் தொடர்ந்து, மறவர் சீமையினை மூன்று ஆண்டுகால வசூலுக்கு ஒப்படைப்பில் பெற்றனர்.
இவையனைத்தும், இருக்க இடம் பிடித்துக் கொண்ட நரி கிடைக்கு இரண்டு டுகளைக் கேட்ட கதையாக முடிந்தது. சிலந்தி வலையில் சிக்கிய ஈ போன்ற இடர்பாடு மிக்க நிலை நவாப்பிற்கு, இதனைத் தமிழகத்தின் துரதிர்ஷ்டம் என்று கூடக் குறிப்பிடலாம் !
தமிழகத்தில் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்து கப்பல்களில் இங்கிலாந்துக்கு அனுப்பிக் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த கும்பெனியாருக்கு மறவர் சீமையின் கைத்தறித் துணிகள் கண்களை உறுத்தின. லாபக் கற்பனை விரிந்தது. அவர்களது லாகூர் வர்த்தகப் பிரதிநிதிகள் இராமநாதபுரம் சீமையில் சுற்றுப்பயணம் செய்து கைத்தறி நெசவுத்தறிகளின் எண்ணிக்கை, உற்பத்தி பற்றிய முழுவிவரங்களையும் இரகசியமாகச் சேகரித்தார்கள். அடுத்து, கலெக்டர் லாண்டன் மூலமாக மநவர் சீமையின் அனைத்துத்தறிகளின் நெசவுத்தறிகளை கும்பெனியாரே கொள்முதல் செய்யவிருக்கும் ஏபோகப் பேராசைத் திட்டத்தைச் சேதுபதி மன்னருக்குத் தெரிவித்து ஒப்புதல் கோரினார். மன்னர் முற்றாக அந்தத்திட்டத்தை மறுதலித்தடன், வீணாகத் தம்மை அலைக்கழித்தார் என்றும் கலெக்மரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சேதுபதி மன்னர், கும்பெனியாரிடமும் வெள்ளைப் பரங்கிகளிடமும் மிகுந்த வெறுப்புடன் நடந்து கொள்கிறார் என்றும், ஆதலால் மன்னரது அலுவலர்களது நடவடிக்கைகளிலும் இந்த வெறுப்பு பிரதிபலிக்கின்றது என்றும் அந்த அறிக்கையில் காணப்படுகிறது. மறவர் சீமைத் துணி கொள்முhலில் ஏகபோக உரிமையை நிலைநாட்ட முயன்று தோல்வியுற்ற கும்பெனியார், அடுத்து சேதுபதி சீமையில் தானியங்கனை விற்றுக் கொள்ளை லாபம் பெற முயன்றனர். இதற்காக அவர்கள் சேதுபதி சீமையில் தானியங்களை விற்பனை செய்வதில் சுங்கவரி விதிப்பில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்குக் கோரினர். இதனையும் முற்றாக சேதுபதி மன்னர் மறுத்துவிட்டார். மன்னரது போக்கை, ஆற்காடு நவாப்பிற்கு முறையீடு செய்து, அவரிடமிருந்து மன்னருக்குப் பதிந்துரை ஒன்றையும் அனுப்பி வைக்கச் செய்தனர். சேதுபதி மன்னர் இதனையும் புறக்கனித்தார். வெளிநாட்டார் மட்டுமல்ல, உள்நாட்டைச் சேர்ந்தவர்ம் கூட வாணிபத்ல் ஈடுபட்டு ஊதியம் ட்டும் பொழுது நடைமுறையில் உள்ள சுங்கத் தீர்வைகளைச் செலுத்துவதுதானே வழக்கம் ? ஏற்கனவே கைத்தறித் துணியில் ஏகபோக உரிமை பெற முயற்சித்தது போல இப்பொழுதும் மறவர் சீமையில் தங்களது கால்களை வலுவாகப் பதுக்கச் செய்த முயற்சி அது !
இத்துடன் கும்பெனியார் தங்களது முயற்சிகளைக் கைவிட்டு விடவில்லை. துhத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கைத்தறித் துணிகள் மிளகு மற்றும் சரக்குப் பொதிகைகனை ஏற்றிக் கொள்ளும் கப்பல்கள், இராமநாதபுரம் மன்னரது பாம்பன்நீர்வழி வழியே சென்னை துறைமுகத்திற்குச் சென்று வந்தன. பின்னர் அந்தப் பொதிகள் ஆழ்கடல் செல்லும் பெரிய கப்பல்களுக்கு மாற்றப்ப்டடு இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தன. கும்பெனியாரது இச் சரக்குக் கப்பல்களுக்குப் பாம்பன் துறைமுகத்தில் வரிசைக்கிரமத்தில் நிறுத்தி சுங்கச் சோதனை இடுவதில் இருந்தும், சுங்கத்தீர்வை விதிப்பில் இருந்தும், விலக்கும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் எனக் கும்பேனியார் மன்னரிடம் கோரி இருந்தனர். இந்தக் கோரிக்கையையும் மன்னர் நிறைவேற்றவில்லை. இதனால் சீற்றமடைந்த கும்பெனிக் கலெக்டர் சேது நாட்டில் தங்களுக்குத் தகுந்த மதிப்பு அளிக்கப்படுவதில்லையென்றும், மன்னரது நிர்வாகம் ஆங்கிலேயருக்குச் சிறிது அளவு கீட வளைந்து கொடுக்காமல் உதாசீனம் செய்து வருகிறது எனவும் தமது அறிக்கையில் முறையீடு செய்து இருந்தார்.
கி.பி. 1794 செப்டம்பர் மாதம் முதல் வாரம், சேதுபதி மன்னருக்கு அவசரக் கடிதம் ஒன்றினைக் கலெக்டர் பவுனி என்பவர் அனுப்பி இருந்தார். அது கடிதம் அல்ல. சம்மன்ஸ் – அழைப்பாணை. இராமநாதபுரம் சிவகங்கை கமஸ்தானங்களுக்கான பூசல்கள் பற்றிய விசாரணைக்கு முத்துராமலிங்கப்பட்டினம் சத்திரத்தில் சேதுபதி மன்னர் ஆஜராமாறு அறிவிக்கம் ஆணை. என்ன திமிர் ! வணிகம் செய்து பிழைக்க வந்த கூட்டம் அரசியலைத் தமது உடமையாக்கிக் கொண்டு செய்யும் ஆர்பாட்டத்திற்கு அடிபணிவதா ? இந்த உத்தரவை ஒரு பொருட்டாக மன்னர் எடுத்துக் கொள்ளவில்லையென்பதை அறிந்த கும்பெனி மேலிடம் கடும் சினத்தால் குதித்தது. ஏனைய பாளையக்காரர்களும் சேதுபதி மன்னரைப் போன்று கும்பெனியாரையும் அவர்களது உத்தரவுகளையும் உதாசீனம் செய்தால் …..! இப்பொழுது சென்னையில் இருந்து கும்பெனி கவர்னர் சேதுபதி மன்னரைத் தொடர்பு கொண்டார். கலெக்டரது சம்மன்களுக்குக் கீழ்ப்படிந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையிட்டார். பலன் இல்லை.
மறவர் சீமையில் இந்த இறுக்கமான சூழ்நிலையில் தலையிட்டு அடங்காப்பிடாரியான சேதுபதி மன்னரைச் சிறையிலிட்டு மறவர் சீமையைத் தமதாக்கிக் கொள்ள நவாப் முயன்றார். திருச்சியில் இருந்த நவாப்பின் மகன் உம்-தத்ல்-உம்ராவைக் கலெக்டர் பவுனியைச் கந்திக்கச் செய்தார். ஆனால் தங்களது ஏகாதிபதியக்குறியில் சிறிதும் தளர்வு இல்லாத கும்பெகியார் முந்திக் கொண்டனர். ஏற்கனவே இராமநாதபுரம் கோட்டையில் உள்ள கும்பெனி ஒற்றன் மார்டின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு கும்பெனியாரது உத்தரவுகளை மதித்து நடக்கும் மனோபாவம் சேதுபதி மன்னருக்கு இல்லை என்ற உண்மையைத் தெளிவாகடப புரிந்து கொண்ட கும்பெனித் தலைமை சேதுபதி மன்னர் மீது போர்தொடுத்துச் சேதுநாட்டைக் கைபற்றுவதற்கான இரகசியத் திட்டத்தைத் தீட்டியது.
சேதுபதி மன்னரது ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் உள்ள பயிற்சி பெற்ற நாலாயிரம் போர்வீரர்கள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் பற்றியும் சிந்தித்துத் தங்களது திட்டத்தை முடிவு செய்தனர். ஆனால் சேதுநாடு முழுவதும் அப்பொழுது வறட்சியின் பிடியில் சிக்கி இருந்ததால் திட்டத்தை அமல்படுத்தாமல் தாமதித்து வந்தனர்.
புத்தாண்டு பிறந்தது.கி.பி.1795 பிப்ரவரி எட்டாம் நாள். உதயதாரகை கிழக்கே பிரகாசித்துக் கொண்டிருந்தது. கும்பெனியாரது பெரும்படை அணிகள் வரிசை வரிசையாக இராமநாதபுரம் கோட்டை வாசலைக் கடந்து மன்னரது அரண்மனையைச் சூழ்ந்து கொண்டன. கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் தனபதி மார்டினின் பொறுப்பில் இருந்ததால் கும்பெனியாரது திட்டம் முழுமையாக இரகசியத் திட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பாகிவிட்டது. சேதுபதி சீமை வரலாற்றில் வேதனை நிறைந்த பகுதி தொடங்கி விட்டது. மன்னரோ மன்னரது வீரர்களோ எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாத நிலை. கும்பெனியாரின் வஞ்சகத் திட்டம் நிறைவேறியது ! சிங்கத்தை அவனது குகையிலேயே விலங்கிட்டது போல, பாளையங்கோட்டை அணிகளுக்குத் தலைமை ஏற்று வந்த தளபதி ஸ்டீவென்சன் சேதுபதி மன்னரைக் கைது செய்து திருச்சி சிறைக்கு அனுப்பி வைத்தான். கலெக்டர் பனியும், தளபதி மார்டினும் அரண்மனையைக் கொள்ளையிட்டு விலை உயர்ந்த அணிமணிகளையும், அரசு கருவூலப் பணத்தையும் கைபற்றினர். அவை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தனர். குடிமக்கள் குழப்பம் செய்யாமல் இருக்கக் கோட்டைப் பகுதி எங்கும் பீரங்கி வண்டிகளும் வெடிமருந்துப் பொதிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
சேதுபதி சீமையில் கும்பெனியாரது நேரடி ஆட்சி. அடங்க மறுத்த மன்னர் அடக்கப்படவில்லை, நீக்கப்பட்டுவிட்டார் என்றாலும் சேதுபதி மன்னரது குடிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கும்பெனியாருக்கு வரி செலுத்த மறுத்தனர். அவர்களது நிலங்களைக் கும்பெனியார் நில அனவை செய்து வரிவிதிப்பு செய்வதையும் எதிர்த்தனர். இந்த அமைதியான எதிர்ப்புகளைக் கலெக்டர் ஜாக்ஸன் வன்முறையில் அடக்கியொக்கினார். இதனால் மக்கள் தளர்ந்து விடவில்லை. மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து தப்புவிக்க முயன்று தோற்றார். பின்னர் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை தொடங்கினார். 24.4.1799 தேதியன்று முதுகுளத்துhர், அபிராமம், கமுதி ஆகிய ஊர்களின் கச்சேரிகள் தாக்கப்பட்டு கும்பெனியாரது ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டன. தானியக் களஞ்சியங்களும், கைத்தறித் துணிக் கிடங்கிகளும் சூறையாடப்பட்டன. இவ்விதம் மக்களைத் திரட்டிக் கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சியில் பக்கத்து பாளையங்களான குளுத்துhர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சாலங்குறிச்சி மக்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இந்தக் கிளர்ச்சி கும்பெனியார ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது.
கி.பி. 1800-1801-இல் இந்த மக்களது கிளர்ச்சி, சிவகங்கைப் பிரதானிகளது ஊக்குவிப்பினால் மீண்டும் துளிர்த்தது. இப்பொழுது இந்தக் கிளர்ச்சி, இராமநாதபுரம் சீமைப்பகுதிகளில் மட்டுமல்லாமல் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் சீமைகளிலும் பரவியது. கும்பெனியரது சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன், அவர்கள் வருவாய் பெறும் வழிகளும் சிதைக்கப்பட்டன. அவர்களது ஆயுதப்படை மக்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அடக்கத் திராணியற்றுத் திகைத்தது. ஆதலால், மிருகபலமும் அசுரப்பண்புகளும் கொண்ட மலேயா, இலங்கைப்படைகள் வரவழைக்கப்பட்டன. மறவர் சீமை மக்களை அவர்கள், ஓநாய்கள் கடித்துக் குதறுவ போலத் தாக்கி அழித்தனர். வீரத்தையும், மானத்தையும் கொண்டு வீறுபெற்றுப் போராடிய மறவர்களது வேலும், வாளும் விளையாட்டுப் பொருளாக வெடிமருந்து வீச்சில் நொறுங்கி அழிந்தன. முடிவு வெற்றி ஆன்ம பலத்திற்கும், ஆருயிர் இலட்சியங்களுக்கம் அல்ல. ஆயுத வலிமைக்கு !
மறவர் சீமையின் மகத்தான மக்கள் புரட்சி இம்முறையும் தோல்வி கண்டது. கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய தளபதி மறிலப்பன் சேர்வைக்காரரையும் மீனங்குடி முத்துக் கருப்பத்தேவைரையும் கும்பெனியாரின் கைக்கூலிகள் வேட்டை நாள்களைப் போலத் தொடர்ந்து சென்று, இறுதியில் அவர்களைப் பிடித்துக் கொடுத்துக் கும்பெனியாரது சன்மானத்தைப் பெற்றனர்.
இனிமேல் மறவர் சீமையில் தங்களை எதிர்ப்பதற்கு வீரமறவர் எவரும் இல்லை என்னும் நிலையை உணர்ந்த கும்பெனியார், மறவரது மகுடமாக விளங்கிய கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கினர். கர்ணனது கவசக் குண்டலங்களைப் போல மறவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறித்து அழித்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக வறட்சியிலும், வறுமையிலும் நைந்து நலிந்த குடிமக்கனைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்தனர். இவ்வளவும் செய்தும் கும்பெனித்தலைமைக்கு சேதுபதி மன்னரைப் பற்றிய பயம் நீங்கவில்லை. மீண்டுமொரு கிளர்ச்சி ஏற்பட்டால்….? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
இந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியின் சூத்திரதாரி திருச்சிக் கோட்டைச் சிறையில் உள்ள சேதுபதி மன்னர் என்பதை கலெக்டர் லுhஷிங்டன் கண்டறிந்தார். சேதுபதி மன்னரை மக்கள் தொடர்பு கொள்ளாத வண்ணம் நீண்ட துhரத்தில் உள்ள நெல்லுhர் அரஷக்கு மாற்றுமாறு குடமபெளித் தலைமைக்குக் கலெக்டர் பரிங்துரைத்தார். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைமயில் குண்டு துளைக்காத அறையொன்றில் சேதுபதி மன்னர் அடைத்து வைக்கப்பட்டார்.
அங்கும் ஆண்டுகள் பல கழிந்து – கோட்டைச் சவற்றிற்கும், சிறைக் கதவுகளின் பாதுகாப்பு எல்லைக்குள்ளும், இரவு பகல் என்ற பேதமற்ற பெருங்கொடுமையான அந்தச் சிறை வாழ்க்கையை நொடிப்பொழுதில் எண்ணிப்பார்ப்பது இயலாத காரியம். உணர்ச்சிகள் மயக்கப்பட்டு, உள்ளத்தின் நம்பிக்கைகள் நசுக்கப்ப்ட்டு அந்த சிறைவாசத்தில் கழியும் ஒவ்வொருவினாடியும் ஒரு யுகத்திற்கு சமமானது. ஆடம்பரத்திற்கும் அனைத்துச் சுகபோகங்களுக்கும் உரியவராக இருந்த இந்தச் சேதுபதி மன்னர், இவ்விதம் பதினான்கு ஆண்டுகளைக் கழித்ததே ஒரு புதுமை. பெரும் சாதனை. நாற்பத்து எட்டு ஆண்டுகால ஜீவியத்தில் அருபத்து நான்கு ஆண்டு சிறை வாழ்க்கையில் செல்லரித்த அவரது உடல் ஒடுங்கியது. 23.1.1809 ஆம் தேதி இரவில் அவரது உயிர் பிரிந்து அமரரானார்.
ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தப் புனித பாரத பூமியில் இருந்து அகற்றி ஒழிக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளினை எய்த எத்துணையோ கிளர்ச்சிகளும், போராட்டங்களும் நடத்தப்பெற்றதை வரலாற்றுப் பதிவுகளில் காண முடிகிறது. கி.பி.1827-இல் வடமாநிலங்களில் நிகழ்ந்த சிப்பாய்களது கிளர்ச்சி, கி.பி. 1827-31 -,ல் கர்நாடக மாநில கிட்டூர் சமஸ்தானத் தன்னுரிமைக்குப் போராடிய கிட்டூர் ராணி சின்னம்மாளது போராட்டம், கி.பி. 1806 -இல் வேலுhர் கோட்டைச் சிப்பாய்கள் வெள்ளையருக்கு எதிராக துhக்கிய கலகக்கொடி, கி.பி.1802-இல் திருவாங்கூர் சமஸ்தானத் தளவாய் வேலுத்தம்பி மேற்கொண்ட கிளர்ச்சி, கி.பி. 1800-இல் கர்நாடகத் தளபதி துhந்தியாவாக் மக்களைத் திரட்டிக் கும்பெனியாருடன் பொருந்திய போர், கி.பி. 1801 -இல் சிவகங்கைப் பிரதானிகள் மருது சகோதரர்களும் ஊமைத்துரையும் கும்பெனியாருக்கு எதிராக மக்களைத் திரட்டிப் பொருந்திய போர்கள், இவைகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது, கி.பி. 1792-95-இல் சேதுபதி மன்னர், கும்பெனியாரது ஆதிக்கப் பேராசைகளை அழித்து ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளும், போர் ஆயுதங்களும் ஆகும்.
திப்பு சுல்தானுக்கு அஞ்சாத கும்பெனியார் சேபதி மன்னரது விடுதலை வேட்டைக்கு அஞ்சினர். குற்றச்சாட்டுக்கள், விசாரணை எதுவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைத்துக் கொன்றனர்.
இறைவனது சந்நிதானத்தில் இணைந்து ஒளிரும் இலட்ச தீபங்கள் ஒளிபெறுவதற்கு ஒரே ஒரு சுடர்தான் பயன்படுகிறது. அதனைப் போன்று இந்த நாட்டின் விடுதலை வேள்விக்கு – இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தீரர்களது உள்ளங்களில் உயிரினும் மேலான நாட்டுப் பற்றையும் நலமான சிந்தனைகளையும் புகுத்தி, வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழச்செய்து வெற்றி காண்பதற்கும், சுதந்திர தேவியின் சந்நிதானத்தைச் சுடர்மிகுந்த ஆலயமாக்குவதற்கும் மறவர் சீமையின் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் என்ற அக்கினிக்கொழுந்து பயன்பட்டுள்ளது.
தமது அரிய வாழ்க்கை முழுவதையும், அன்னிய ஆதிக்கக் கனவுகளுக்கு எதிராக, விடுதலை வேள்விக்கு ஆகுதியாக அளித்து, சுதந்திர யாகம் சுடர்விட்டு பொலிய, தியாகியான அந்த இளம் மன்னர் பற்றிய வீர நினைவுகள், அவரது விடுதலை முழக்கம் வருங்காலத் தலைமுறையினர் பிறந்த மண்ணை நேசித்து நாட்டுப்பற்றுடன் வாழ நினைவூட்டும் என்பதில் ஐயமில்லை!
கட்டுரை ஆக்கத்திற்கு துணையான ஆவணங்கள், நுhல்கள்:
1. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பக ஆவணங்கள்
2. சேதுபதி மன்னர் செப்பேடுகள்
3. இராமநாதபுரம் சமஸ்தான மான்யுவல் (ஆங்கிலம்) – ராஜாராம் ராவ்
4. இராமநாதபுரம் சமஸ்தான நிலமானியக்கணக்கு
5. மதுரைச் சீமை வரலாறு – (ஆங்கிலம் ) நெல்சன்
6. மதுரை வரலாறு (ஆங்கிலம் ) – டாக்டர்.கே. இராஜய்யன்
7. மறவர் வரலாறு ( கி.பி. 1700-1800) ஆங்கிலம் டாக்டர் எல். கதிர்வேலு
8. மற்றம் சுவடிள், கல்வட்டுகள்.

 நன்றி :  http://thevar.co.இன்
 
 
 
 
 
....

தேவர் – காமராஜர் ஆரம்பகாலத்தில்

1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார்

ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் பெருமகனார் கேட்கிறார்.

அப்படி பசும்பொன் பெருமகனார் கேட்டதற்குக் காரணம், இன்று போல் 18 வயது வந்தோரெல்லாம் அன்று வாக்களிக்க முடியாது. யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் பெருமகனார் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “தேவரையா! எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று தாயும் மறுத்த காலம் அந்த காலம்.

அதற்கு மேல் பசும்பொன் பெருமகனார் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் பெருமகனார்.

பசும்பொன் பெருமகனாரின் வழிகாட்டுதலும் தேர்தல் பணிகளாலும் இத்தேர்தலில் காமராஜரின் விருதுநகர் நகரசபை தேர்தலில் வெற்றியும் பெற்றார். ..

செட்டிநாட்டு வட்டாரத்தில் காங்கிரஸ் மானத்தைக் காத்த தேவர், விருதுநகர் வட்டாரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்று கேள்விப்படுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் காமராஜரை பட்டப்பகலில் விருதுநகர் பஜார் தெப்பக்குளம் வீதியில், ஜில்லா போர்டு தேர்தல் நடந்த சமயத்தில் காமராஜரின் வேட்டியை உரிந்து விட்டு இரண்டு சண்டியர்கள் வேட்டியை இருபுறமும் மிதித்துக் கொண்டார்கள். வேறு இரண்டு சண்டியர்கள் சாணி உருண்டைகளை முகத்தில் எறிந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு மேலாக தற்போது இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டியிருக்கும் தகவல் பசும்பொன் பெருமகனாருக்குக் கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார்.

காமராஜரை சந்தித்து மேலே சொன்னவைகள் உண்மை தானா என்று கேட்கிறார். ‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர்.

அன்று இரவு விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் பெருமகனார் பேசினார். அவர் பேச்சில் தீப்பொறி பறந்தது.

“இங்கே இருக்கிற நாடார் உறவின் முறை மகமை கடைக்காரர்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் சில லட்சங்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டுவதாக கேள்விப்படுகிறேன். இங்கிருக்கின்ற ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுக்கு வெள்ளைக்கார அதிகாரிகள் வந்து போவதை சாதகமாக நினைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு நடந்தால் அந்த அறியாமைக்காக அடியேன் வருத்தப்படுகிறேன். நாங்கள் வெள்ளைக்காரர்களையே எதிர்க்கும் கூட்டம், உங்களை எதிர்ப்பதும், உங்கள் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்கு முடியாத காரியமல்ல. விருப்பமான காரியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1936-ல் நடந்த தேர்தலின் போது காமராஜரை வேட்டியை உரிந்து படுத்திய பாட்டை கேள்விப்பட்டேன். சூழ்நிலை அந்த நேரம் இங்கு நான் வரமுடியாமல் போய்விட்டது. இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன்.

காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப் பேசினார்.

அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் பெருமகனாருடைய ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் வி.வி.ராமசாமி நாடார் கேட்டார்.

அதற்கு கலெக்டர் “உங்கள் வீட்டுக்கோ நடத்தும் பொதுக் கூட்டத்திற்கோ பந்தோபஸ்து கேட்டால் நாங்கள் தாராளமாகக் கொடுக்கலாம். நீங்கள் கேட்பது போல் ஓட்டுக்கேட்கப் போகும்போது போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தால், தேவர் சாதாரண மனிதரல்ல. போலிசோடு நீங்கள் ஓட்டுக் கேட்பதை போட்டோ எடுப்பார். ஜஸ்டிஸ் கட்சி போலீஸை வைத்து தேர்தல் நடத்துகிறது. போலீசாரை வைத்து மிரட்டி ஓட்டுக் கேட்கிறது என்று கோர்டுக்குப் போவார். அதன்பின் எங்கள் நிலை என்னவாகும்” என்று சொல்லி மறுத்தார்.

வி.வி.ராமசாமி நாடார் கிராமங்களுக்குப் போய் ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜ் நாடார் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜ் நாடாரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான்.

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஆன்மீக ஞானி,
தேசியத் தலைவர்,
பொதுவுடைமைத் தலைவர்,
வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட
அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது.

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானியாரின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசு ஆட்சியை வகுக்கும்.

ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

இங்கே இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.

தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன் மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.

அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.

வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.

நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.

ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.

உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.

கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது யார்?

கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது யார்?

May 15 2010one Commented

Categorized Under: வரலாறு

“ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது” என்பது பழமொழி. வணிகராக வந்த வெள்ளையர் முதன் முதலாக வங்கத்தில் கால் பதிய வைத்தனர். பின்னர் ஆற்காடு நவாப்பின் கையாலாகாதத்தனத்தால், தண்டமிழ் கிழவர் நாட்டில் ஆட்சியுரிமையைப் பெற்றனர். 1790 ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7ம் நாள் முதல், நாடு ஏகாதிபத்தியரின் முழு ஆட்சிக்குட்பட்டது. தளபதி டொனால்ட் என்பவன் மதுரை ஆட்சித் தலைமை ஏற்றான். நிலவி இருந்த 72 பாளையங்களையும் சிதைத்தான். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், போர்க்கருவிகள் அனைத்தையும் கொண்டு வந்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்று 03.10.1801ல் ஆணை பிறப்பித்தான். இதனால் தமிழகம் ஆங்கிலேயருக்கு முழு அடிமையாகிவிட்டது. இவ்வகையில் மருதுபாண்டியர்கள் இறுதி மன்னர்களாவார்கள்.

கி.பி.5ம் நூற்றாண்டில் ‘புல்லி’ என்ற கள்ளர் கோமகனார் ஆண்ட போது வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் 12 பகுதிகளாக இருந்தது. அவற்றுள், “அறுவர்”,”அருவா வடதலை” என்ற இரு நாடுகளையும் ஆட்சி செய்து வந்தவர் தொண்டைமான் இளந்திரையன் ஆவார். இத்தொண்டைமான் இளந்திரையன் வழிவந்தவர் தான் சுந்தர பல்லவராயர் என்பவர். இங்கு வேட்டையாடுதல் பொருட்டு தெற்கே வந்தார். மேலும் தன் பூர்வீ க மண் தேடிவந்து சடாமுனி இருந்த ஒரு இடத்தில கோட்டை கட்டினார். இது புதுக்கோட்டை என்று வழங்காலாயிற்று. அப்பகுதி சேதுபதி ஆட்சிக்குட்பட்டு இருந்ததால் சேதுபதிகளோடு மறப்போர் புரிய வேண்டியதாயிற்று. போர் சேதுபதிகளுக்கு வெற்றியாக அமைந்தாலும், இவர் தம் வீரம் ஆண்மை பார்த்து சேதுபதி அவர்களின் மண உறவு சம்பந்தத்தோடு புதுக்கோட்டையில் கோட்டை கொத்தளத்தோடும் மறப்(கள்ளர், மறவர் மற்றும் சேர்வை) படைகளோடும் ஆட்சி செலுத்தி வந்தனர். பின்னர் அது தொண்டைமான் புதுக்கோட்டை எனப் பெயாரகியது.’காட்டிக் கொடுத்தனர்’ என்று தொண்டைமான் வழியினரை களங்கப்படுத்தி, அருமைத் தாயகத்தையே அவமதித்தது மட்டுமின்றி பல வீணர்கள் அதையே புலம்புமாரும் வழிசெய்து சென்றுள்ளனர் சில கோடரிக்காம்புகள்.

எனவே உண்மை வரலாற்றை எடுத்துக்கட்ட வேண்டியது நம் கடமையாகிறது.

வந்தான் பானர்மேன்:

பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காகவும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காகவும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார்கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையும் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள.

இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான்.

பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான்.

ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான்.

இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிடம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்காரர் கும்மி:

வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம்.

Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112)

இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார்.

“புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையானின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.”

“நயமாகப் பேசி விருந்துபச்சாரங்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்று ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

“சர்தார் முத்து பைரவ அம்பலக்காரரும் புதுக்கோட்டைத் தொண்டைமானும் ஆங்கிலேயரிடம் மிகவும் நட்புப் பூணடவர்கள். மறவர் பாளையங்களின் பரம்பரை வைரிகளான கம்பளத்துப் பாளையக்காரர்களை வேம்பென வெறுப்பவர்கள். அதிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் மறவர் பாளையங்களில் புகுந்து புரிந்து வந்த கொள்ளைகளையும், கொலைகளையும் கேட்டு உள்ளம் கொதிப்படைந்தவர்கள்” என்று அறிஞர் தமிழ்வாணன் தமது நூலின் பக்.208 ல் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

யார் அம்பலக்காரர்?

“முத்து பைரவ அம்பலக்காரர் தூய மறவர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் முன்னோர்கள் இராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை தனியாக பிரிந்தவுடன், அவர்கள் மறக்குல கள்ளர் மன்னராகிய புதுக்கோட்டை தொண்டைமானிடம் பணிபுரிய வந்துவிட்டார்கள்.

தவறானது:

செந்தமிழ் நாட்டின் பழந்தமிழ்க்குடி மறவர் பாளையங்களுக்கு பரம்பரை எதிரியாகவே, வந்து குடியேறியவர்கள் கம்பளத்துக்காரர்கள். தங்களது சுயநலம் காரணமாக நாடு, மக்கள் பற்றிய கவலை இல்லாது இருந்ததோடன்றி வீரவணக்கத்திற்குரிய மறவர் பாளையங்களுக்கு எதிரியாகவும் இருந்தனர். அவர்களின் ஒருவனே வீரபாண்டிய கட்டபொம்மன். அவனை தொண்டைமானின் அருமை நண்பன் என்று ம.போ.சி சொல்வது ஒரு புரட்டுக் கதையே. இதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பயன்படுத்திக்கொள்ளப்பட்டார்.

இதைக்கண்டு தான் “கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன்.

“பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணியம் தமது நூலின் பக். 165 ல்.

இதனை “கோலார்பட்டியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியுள்ள பகுதியால் அறியலாம்.

இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனாரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.

நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிடம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன்.

ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்!

பல அடுக்கு மாளிகைகள் கொண்ட அழகான அரண்மனை கொண்டவர்கள் தொண்டைமான்கள், தஞ்சம் என்று வந்தவர் யாராக இருந்தாலும் அஞ்சேல் என ஆதரவு மட்டுமல்ல, தமது உயிரையும் தியாகம் செய்யும் உதார குணம் கொண்ட மறவர்கள். காட்டிகொடுக்கும் கயமைத் தொழில் செய்யும் கைகூலிகள் அல்ல அவர்கள் என்பதை எடுத்துக்கட்டும் வரலாறு பலவுண்டு, ஏடுகள் ஏராளமுண்டு என்பதை அறிஞர் மக்கள் அறிவர்.

இவ்வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல?

வீரமரணமா?

“பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

வணங்காமுடி:

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். இது தான் மறத்தமிழ் மக்களின் தியாகங்களை உறுதிப்படுத்தி மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் கடமையோ?

(கட்டபொம்மனை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், பூலித்தேவன், வெள்ளையத்தேவன், தொண்டைமான் மற்றும் மருதுபண்டியர்களை எப்படி எல்லாம் ம.போ.சி பயன்படுத்தி வரலாற்றை பாழ்படுத்தி இருக்கின்றார் என்று உணரும்போது தான் இப்பதிப்பை , கட்டபொம்மனைப் பற்றிய குறைகூறும் பதிப்பாக இருந்தாலும் அதை இங்கே பதிக்கிறோம். உண்மையில் யாரையும் குறைகூற விரும்புவது நமது நோக்கமும் அல்ல, நாம் அப்படிப்பட்டவர்களும் இல்லை. இருத்தாலும் நரியிடம் சிங்கக் கர்ச்சனை மற்றும் குதறல் தான் எடுபடும் என்பது தான் உண்மை. அதனால் தான் இப்பதிவு.)

எப்படியோ மக்கள் மத்தியில் குழப்பம் உருவாக்கப்பட வேண்டும், அதையே மறுபடியும் மறுபடியும் சொல்லியும் எழுதியும் வந்தால் அது உண்மையாகி விடும் என்று எண்ணுவது அறிவுடைய செயலாகாது. (சமீபத்தில் தஞ்சையில் நடந்த தமிழ் தேசியக் கட்சி (Tamil Nationalist Movement (TMM)) கூட்டத்திலும் சிலர் “தொண்டைமான் வேலை” என்று கேவலமாகக் குறிப்பிட்டது நம் நினைவுக்கு வருகிறது) வரலாற்றை திரித்துக் கூறும் புரட்டர்களுக்கு எதிர்காலம் (இன்று) பதில் சொல்லியே தீரும்.(சொல்லியாகி விட்டது))

மக்களின் தலைவர்:
குன்றமென நாட்டில் உயர்ந்துள்ள தென்னகத் திருக்குலம். தீந்தமிழ் மறக்குலம் புதுக்கோட்டை மன்னருக்கும் அவர் தம் மக்களுக்கும் இம்மியும் களங்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. நீண்ட காலமாக மக்கள் நல்வாழ்வில் தொடர்புடைய தமிழ் மரபிற்கும் களங்கம் ஏற்படுத்தி விட முடியாது.

“மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையினர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!)

எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம்.

தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.

மருதுபாண்டியர் ஆக்கிரமித்துக் கொண்டனரா?

‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூல் எழுதியுள்ளார் ம.போ.சி. அவர்கள. அதில் சின்ன மறவர் நாட்டின் செங்கதிராகத் திகழ்ந்த மான மறத்தமிழ் மாமன்னர் மருதுபாண்டியர்களையும் குறை கூறாமல் விட்டு விடவில்லை.
வழக்கம் போல் இங்கயும் வரலாற்றை திசை திருப்பிவிட்டு இருக்கின்றார். முரண்பாடான செய்திகளையே எடுத்துக்காட்டி இருக்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட வருந்துகின்றோம்.
ம.போ.சி கூறியதாவது:
“முத்துவடுகநாதர் ஒரு போரில் வீரமரணம் அடைந்தார். களத்திலே அவருடைய வீர மனைவி வேலுநாச்சியாரும், தளபதிகளான மருதுபாண்டியர்களும் இருந்தும் அவரைக் காப்பாற்ற தவறிவிட்டனர்”
இவ்வாறு உறுதியாகச் சான்று கூறிய ம.போ.சி அவர்கள்.
மேலும் தொடர்கிறார்:-
“அவர் மனைவி வேலுநாச்சியார் சிவகங்கைப் பாளையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். வேலுநாச்சியார் திடீரென்று மரணமுற்றதும் அதுவரை தளபதியாக இருந்துவந்த மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்”
என்று தமது நூலின் பக்.62 ல் குருப்பிட்டுள்ளார். இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ம.போ.சி. அவர்கள் தமது நூலின் முன்னுரை பக்.6 ல் கூறிய கருத்துக்களுக்கும், வரிவடிவில் தீட்டிய பக்.62  க்கும் என்ன தகுதி இருக்கின்றது. எந்த அடிப்படையில் இதை எடுத்துக் கொள்வது. குழப்பத்தையே உண்டாக்குகின்றதே தவிர வரலாறு காண முடியவில்லை.
23-05-1772 ல் மன்னர் முத்து வடுகநாததேவர் மறைந்தார், என்று இராமநாதபுரம் மாவட்டச் சுவடி பக்.890 ல் சான்று உள்ளது.
வேலுநாச்சியார் நீடித்து இருக்க விரும்பவில்லை. நாட்டின் நலன் கருதியும், மக்களது மனநிலையையும் அறிந்தார். ஆட்சிப் பொறுப்புகளை மருதுபாண்டியர்களிடம் ஒப்படைப்பதாக மக்கள் மன்றத்தில் அறிவித்தார். 1780ல்  தான் அரியணை அமர்ந்தனர் மருதுபாண்டியர்கள்.
“வேலுநாச்சியார் திடீரென்று மரணமுற்றதும், மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்” என்கிறார் ம.போ.சி.
எட்டு ஆண்டுகள் அரியணையில் இருந்தவர் வேலுநாச்சியார் அவர்கள். யானைமலை, திண்டுக்கல் வாழ்வு என்னாயிற்று? உடன் இருந்தவர்கள் இருந்தவர்கள் மருதுபாண்டியர்கள். ஆக்கிரமிப்பு நடந்தது எப்போது?
மேலும் “உயிரை காப்பாற்ற தவறி விட்டனர்” என்று எழுதியுள்ளார் .
மாற்றானுக்கு ஒரு அங்குல இடம்கூட தரமாட்டேன் என்று உரிமை முழக்கமிட்டு களம் புகுந்தவர் மன்னர் முத்து வடுகநாத தேவர்.
தளபதிகளாக இருந்த மருதுபாண்டியர்கள் கச்சை வரிந்து கட்டிக்கொண்டு கையில் வாளெடுத்து காலத்திலே வெள்ளையர் தலைகளை வெட்டி வீழ்த்துவதிலேயே முன்னணி சென்றவர்கள். வாளையும் கையையும் மடக்கி கொண்டு, வெண்கவரி வீசிக்கொண்டு  பதுமை போல் முத்துவடுகநாதரின் பின் சென்றவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் – “தேவர் முரசு” மார்ச்சு 86 குறிப்பு.
கூலிப்படையின் வஞ்சகத்தால் சின்ன மருது சிக்கிக்கொண்டார்.
பெரிய மருதுவை கைது செய்ய முடிந்ததா?
அவர் கையில் விலங்கு பூட்ட முடிந்ததா?
கோழை போல்  அவரை தூக்கில் வெள்ளையர் கையால் தொங்கவிட முடிந்ததா?
இத்தகு வரலாற்று சிறப்புப் பெற்ற மான மறத்தமிழ் மன்னர் மருதுபண்டியர்களுக்கும் வேலுநாச்சியாருக்கும் களங்கத்தை உருவாக்க வேண்டும் என்று கூலிப்படைகள், வெள்ளைப்படைகள் செய்த சதித் திட்டங்களை போன்று நழுவவிடாமல் ம.போ.சி. அவர்களும் களங்கத்தை உருவாக்கி அதை வரலாறு என்றும் அதை உறுதிப்படுத்தி கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி தான் மேலே குறிப்பிட்டுள்ள அவர் எழுதிய வரிகள். நாடு மொழி, இனம் என்றும் முப்பிரிவிற்கும் உரிமையான மறத்தமிழ் மன்னர், மக்கள் எல்லாம் அவர்களை மருதீசர், மருதேந்திரன், மருதுபூபதி என்று தங்களது இதயத்தில் தெய்வமாக வைத்து வணங்கி வந்தனர், வருகின்றனர்.
சாந்து சக்கரைப் புலவர் இயற்றிய தர்க்கயாகப் பரணியின் 18 பாடல்கள் இதற்கு சான்றாகும். வெள்ளையர்களை மட்டும் எதிர்த்து வீரமுழக்கமிட்டு, மாற்றான் டச்சுக்காரனின் காலடி பணிந்து பணத்தை சேர்த்துக் கொண்ட மாவீரர்கள் (கட்டபொம்மன் போல்) அல்ல மருதுபாண்டியர்கள்.
தன்னுயிர் காக்க மட்டுமல்ல, நாட்டின் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்தவர்கள். சுயநலம் பறிபோகிறது என்பதற்காக அவர்கள் வெள்ளையர்களை எதிர்த்த மாவீரர்களும் அல்ல.
தஞ்சமென்று வந்தவர்களுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து, அவரின் உயிர் காக்கப்பட தன்னையே அழித்துக் கொண்ட பார் வேந்தர் மருதுபாண்டியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
“மருது உன்னைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை நாங்கள். நீ தஞ்சம் அளித்துள்ள ஊமைத்துரையை மட்டும் என்னிடம் ஒப்படைத்துவிடு. இந்த நாட்டையே உனக்கு உரிமையாக்குவேன்” என்று தளபதி வேல்சு வேண்டினனே ஏன்? ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாலா?
மேலூர் கள்ளர்கள்:

வானம் பொழியுது, பூமி விளையுது வரிப்பணம் ஏன்? யார் முழங்கியது?
மயில்றாயன் கோட்டை, மேலூர் கள்ளர்களிடம் மதுரை நாயக்கர் அரசு வரிப் பணம் கேட்டு வந்தபோது அவர்கள் முழங்கிய வீர முழக்கங்களை தாங்கள் தான் முலங்கியதாகப் பெயர் பதிய வைத்துக் கொண்டவர்கள் அல்ல மருதுபாண்டியர்கள்.
மதுரை மாவட்ட விவரச்சுவடி பக்.88 ல் அறிஞர் பிரான்சிசு எடுத்துக்காட்டியுள்ளார்.
நிம்ராட்: பாபிலோனிய சக்கரவர்த்தி ‘நிம்ராட்’ என்பவன் உலகமகா வீரனாகத் திகழ்ந்தவன். அவனுக்கு இணையாக விளங்கியவர் மருதுபாண்டியர். கீழ்த்திசை நிம்ராட் என்று தளபதி வேல்சு பாராட்டியுள்ளான்.
நெல்லை மாவட்டச் சரிதை பக்.212-213 ல் அறிஞர் கால்டுவெல் எடுத்துக்காட்டியுள்ளார்.
மனுநீதிச் சோழனை காண விரும்புபவர்கள் அவனது அரண்மனை வாயிலில் கட்டி இருந்த பெரிய மணியை அசைத்துப் பின்னர் இசைவு பெற்றுத்தான் மன்னரைக் காணவேண்டும்.
ஆனால்…! மருதுபாண்டியர்கள் பற்றி வேல்சு கூறுகிறார்.
தென்றல் விளையாடி வந்த சீமையிலே சுழட்டி அடிக்கும் சூறாவளிப் புயலாக 1801ம் ஆண்டு மே திங்கள் ஊமைத்துரை உருவிலே வந்தது.
அகதியாக வந்து அடைக்க்கலாமானான் மருதுபாண்டியர்களிடம் என்பதை மறந்துவிடக் கூடாது.
வரலாறு:
இன்றைய நிகழ்ச்சி எதிர்கால வரலாறு, உண்மைச் செய்திகளை எடுத்தக் காட்டும் ஓர் காலக் கண்ணாடி ஆகும். அதுவும் கூட அன்றே கலப்படமாகி விட்டது!
“ஒருவருடைய வரலாறு எழுதப்பட வேண்டுமேயானால், அவர் மறைத்த பின்னர் தான் எழுதப்படவேண்டும். அவரோடு தொடர்பு கொண்டவர்கள் கல்விப்பயிற்சி முகுந்தவர்களால் தான் எழுதப்படவேண்டும். அது தான் உண்மையான வரலாறு ஆகும். பிற்காலத்தில் எழுதுவது என்பது பொய்யும், புனைந்துரையும் புகுத்து விடும்” என்பது பாம்பன் சுவாமிகளின் திருவாக்கு.
அதை முழுமையாக ஏற்றுக்கொண்ட ம.போ.சி. தமது நூலில் முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எழுத்து வரி வடிவிலே அமைக்கபடுகின்ற போது முழுமையாகவே தமது கருத்துக்களை புறக்கணித்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.
மருதுபாண்டியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர் என்று உறுதியான எடுத்துக்காட்டு எந்த அடிப்படையில்? என்ன தகுதி? என்பது இளையோர்களது   கேள்வி? சொல்லித்தானே ஆகவேண்டும் பதில்!
ஏன்? என்ன காரணம்?
ம.போ.சி எழுதிய நூல் வரலாறு மட்டுமல்ல, தேசியச் சொத்து(!), தமிழத்தின் பங்கு. இதை மறந்துவிடக் கூடாது. பதில் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது.
எனவே, அவரது அணுகுமுறை, அவரது கருத்துக்களுக்கே மாறானதாகவே எழுதப்பட்டிருக்கின்றது. அந்த தேசிய தமிழகப் பங்கு நூலினால் விடுபட்டுப்போன செய்திகளை உரக்க சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது மறத்தமிழ் தேசிய மக்கள்.
எனவே, இந்திய தேசிய வரலாறு தமிழத்தின் பங்கு அல்ல என்பதை உறுதியாக எடுத்துக்காட்டுவது தவறாகாது.
இந்திய துணைக் கண்டத்திலேயே வழிகாட்டியாகவும், தமிழகத்தின் மிகப்பெரிய ஓர் தேசிய இனத்தின் உண்மை நிகழ்சிகளை ஆய்ந்து அதை நியாப் படுத்தி வெளியிட வேண்டிய கடமை தவறிய நூல் தேசிய வரலாறு ஆகுமோ?
இதை வரலாறு என்று ஏற்றுக் கொள்ளப்படுமேயானால்…?
எதிர்காலம் வரலாற்று ஆசிரியர் என்று எவரும் பெருமை பேச முடியுமோ? தமிழகம் மட்டுமல்ல. தமிழுலகமே வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படலாம் (ஏற்கனவே பாதி அப்படித்தானே இருக்கிறது இப்போது) என்பதை சுட்டிக் கட்டுகின்றோம்
எனவே, நற்றமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் எல்லாம், பல்வேறு நிலைகளிலும் எதிர்த்து வீரப்போர் புரிந்த மறத்தமிழ் மக்கள், மாவீரன் பூலித்துரைப் பாண்டியன், முத்துவடுகநாதத்தேவர், மாவீரத்தளபதி வெள்ளையத் தேவன், மருதுபாண்டியர்கள் ஆகிய மறத்தமிழ் மக்களின் உரிமை முழக்கங்களையும், தங்களது குருதியை இம்மண்ணில் ஆறாகப் பெருக்கியும், உயிர் நீத்த வீர வரலாறுகள் அறிந்தீர்கள். அதே நேரத்தில் வந்தவன் கால்களில் மண்டியிட்டும் சுயநலம் பேணி மக்களிடம் குழப்பம் உருவாக்கியும் மறத்தமிழ் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த துரோகச் செயல்களையும் பார்த்தீர்கள்.
அத்துடன்…
எது உண்மையான வரலாறு? வரலாற்று புரட்டு எது என்பதையும் தெரிந்து கொண்டீர்கள்.
எனவே தியாகி யார்? துரோகி யார்? வீரர்கள் யார்? கோழைகள் யார்? வீரர்களுக்குரிய மரியாதையைச் செய்ய தவறி விடமாடார்கள் என்று நம்புவோமாகுக.
(ஆசிரியருக்கு, இன்றும் ராஜராஜன், பூலித்தேவன், மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தியாகம் போற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தமிழும் தமிழரும் உள்ளவரை இது நடக்கும். எத்தனையோ நல்ல வீரிய உள்ளங்கள் வாழ்ந்து மறைந்த புண்ணிய பூமி எம் தமிழ் பூமி. அவர்களின் எண்ணங்கள் என்றும் இங்கே உறைந்து நின்று அனைவரையும் காக்கும் – வீரத் தமிழ் மைந்தர்கள்.) ஒலிக்கட்டும் உண்மை வரலாறு.
நன்றி - “விடுதலைப் போரின் மறத்தமிழர் உண்மை வரலாறு”
சமுதாய விடிவெள்ளி திரு. வி.ஆ. ஆண்டியப்பத்தேவர்.
நன்றி : http://thevar.co.in/
 
 
 
....

சேற்றில் முளைத்தவனா வெள்ளையத்தேவன்?

உள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம்.
“அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை நாயைப் பின் தொடர்ந்து சென்றான். சேற்றில் குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையை கண்டு வாரி அழைத்துக் கொண்டான். திரும்பினான் அரண்மனை.
“காட்டில் கண்டிபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று அரண்மனையில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்து குழந்தையின் பெற்றோர்கள் மன்னருடன் விவரம் சொல்லி குழந்தையை தரும்படியாக வேண்டினர். மறுத்துவிட்டான் மன்னன். பிள்ளை பாசம் பெற்றவர்களுக்கு அல்ல, வளர்த்தவனுக்கு. பயனில்லாததால் திரும்பிவிட்டனர் பெற்றோர்கள்”
குழந்தை யார்?
ஒரு நாள் மங்களத்தேவர் அவர்களின் மனைவி விறகு வெட்டுவதற்காக காட்டிற்குப் புறப்பட்டார். போகும் போது தமது கைக்குழந்தையையும் எடுத்துச் சென்றார்.  ஒரு மரத்தடியில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு காட்டிற்குள் சென்றுவிட்டாள். போனவள் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இருட்டிவிட்டது. தூங்கி எழுந்த குழந்தை தாயைக் காணாது தவழ்ந்து சென்று அந்தச் சேற்றில் சிக்கிக் கொண்டது.
வீட்டுக்கு வந்த தமது மனைவியை பார்த்து குழந்தை எங்கே? என்று கேட்டாராம் மங்களத்தேவர். பதறிப்போய் தாய் தேடிப் புறப்பட்டாள். மற்றும் சிலரும் தொடர்ந்து காடு சென்றனர். கிடைக்கவில்லை. அந்தக் குழந்தை தான் அரண்மனையில் வளர்ந்து வருகிற வெள்ளையத்தேவனாகும் .
இது தான் அந்தக் கட்டுக்கதை. பொய்ப் புரட்டு.
மறக்குலத் தாய்மார்களுக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளனர்.  தாய்மார்கள் தன்னுயிரைக்கூட இழக்கத் துணிவர். ஆனால்…..! தமது குழந்தையை வினாடியும் விட்டுப் பிரியாதவர்கள். விறகு வெட்டப் போனவள் குழந்தையை மறந்து விட்டு வந்துவிட்டாள் என்பது தாய்க்குலத் துரோகச்செயலாகும். அடுத்து காட்டுக்கு வேட்டையாட வந்த கட்டபொம்மன் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து வளர்த்தான். படைத்தலைவனாக்கினான். அவன் தான் வெள்ளையத்தேவன். உண்ட கடனுக்காக உயிர் கொடுத்தான். செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான் என்று மறக்குல மாண்புக்கு மீது அழியாப் பழி சுமத்தியுள்ளனர்.
என்றாலும்…… தவறு யாருடையது?
மறக்குல மக்களே அடிச்சுவடுகூடத் தெரியாது, புரியாது அவல நிலையில் இருக்கின்றனரே.  வரலாறு எழுதுபவர்களாவது உண்மை நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடாது முறையானவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டுவது தான் வரலாறு ஆகும். தவறினால் திறனாய்வு இல்லாத புரட்டர்கள் என்ற களங்கம் ஏற்பட்டுவிடும்.

கட்டபொம்மு நாயக்கர் பிறந்தது 03-01-1760
பட்டம் ஏற்றுக் கொண்டது 02-02-1790
அவன் தூக்குக்கயிற்றில் தொங்கியது 16-10-1799
மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி தான்.

02-02-1790ல் பட்டம் ஏற்றவன் வேட்டையாட காட்டிற்குப் போகிறான். கண்டெடுத்தான் ஒரு குழந்தையை. பொடி நடை பயிலும் வயது. சண்டை துவங்கியது. 1798 ல் இந்த ஒன்பது ஆண்டு காலத்திற்குள்ளாக வளர்ந்து வில், வாள் பயின்று வீரனாக படை நடத்தும் தலைவனாக ஆகிவிட்டான் என்றால்…..! மந்திர வித்தையா?
அவனுக்கு வெள்ளையம்மாளைத்   திருமணம் செய்திருக்க முடியுமோ? கற்பனைக்குக் கூட எட்டாத ஒன்றை கதையாக தீட்டிவிட்டனர். கதையும் அல்ல. களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்று தீட்டிய புரட்டு, புனைந்துரையாகும்.
வெள்ளையத்தேவன்?
முத்தமிழ் நாடாம் வித்தகர் போற்றிப் புரக்கும் செந்தமிழ்நாடு சேதுபதி சீமை. அதன் அணிகலனாக உள்ள சிறு கிராமம் சாயல்குடி. அதன் அருகே மங்கம்மாள் சாலை இருந்ததால் சாலைகுடி என்று பெயர் இருந்தது. வசதிகள் நிறைந்த இடமாக இருந்தது. மேலும் பல தியாக வீரர்களை விளைவித்த நிலம், பின்னால் அது சாயல்குடி என்ற பெயராகி விட்டது.
அந்த சாயல்குடியில் வாழ்ந்து வந்த பெரியார் மங்களத்தேவர் அவர்கள். மக்கட் பண்புடன் வாழ்ந்த அவர் குறுநில மன்னரின் சிறப்புக்குரியவராகவும் இருந்தார். அவரது திருமகன் தான் வெள்ளையத் தேவன். சேற்றில் கண்டெடுத்தவன் அல்ல. சேது நாட்டின் செந்தமிழ் செல்வனே ஆகும்.
இளமையில் அவன் மறக்குல மாண்புடன் வில், வாள். ஈட்டி முதலிய வீர விளையாட்டுகளில் வல்லவனாக விளங்கினான். அவனது துணையாக இருந்தவர்கள் கட்டகருப்பணன், சுந்தரலிங்கம் என்ற இரு தாழ்த்தப்பட்ட (அரிசன)  இன வீரர்கள். இணைபிரியாத தோழர்களாவர்.
இந்த நிலையில்,ஒருநாள் கட்ரா, கட்டப்பிரமையா என்ற கம்பளத்து நாயக்கர் வாரிசு, வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கர் சாயல்குடி வந்தான். மங்களத்தேவர் அவர்களைக் கண்டான். எட்டயபுரம் அரசர் தமக்குச் செய்துவரும். தொல்லைகளையும், அதனால் தாம் அடைந்த இன்னல்களையும் எடுத்துக் கூறினான். ஆதரவு தந்துதவ வேண்டினார் தேவர் அவர்களிடம்.
“வெள்ளையத்தேவா….  !
வந்திருப்பவர் வீரபாண்டியபுரம் கட்டபொம்மு நாயக்கர் நம்மிடம் உதவி வேண்டி வந்திருக்கிறார். வந்திருப்பவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. எனவே, நீ உடன் சென்று அவருக்கு உறுதுணையாக இருந்து வெற்றி கொண்டு வா. உனக்குத் துணையாக உனது நண்பர்கள் கட்டக்கருப்பணன், சுந்தரலிங்கம் இருவரையும் வேண்டிய ஆட்களையும் கூட்டிச் செல்க” என்றார்.
தந்தை ஆணைப்படி தனையன் வெள்ளையத் தேவன் புறப்பட்டான். வீரபண்டியாபுரம் கட்டபொம்மு நாயக்கரும் வந்து சேர்ந்தான்.
வெள்ளையத்தேவன் கட்டபொம்முவுக்கு உதவிக்கு வந்ததை அறிந்த எட்டயபுரம் அரசர் திசை திருப்பப்பட்டது. தென் நாட்டில் வந்த வெள்ளையர்களுக்கு ஆதரவு கொடுத்தார். எப்படியும் தனக்கு துரோகம் செய்த கட்டபொம்முவை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தாரே தவிர, எட்டயபுரம் அரசர் குமார முத்து எட்டப்பர் துரோகியல்ல. துரோகிகளை ஒழிக்க முன் வந்தவர்.
தமிழ்க் கலை வளர்த்தவர். பல தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். உமறுப் புலவர் போன்றோர்களை வளர்த்தவர். உறுதுணையானவர் தான் எட்டயபுரம் அரசர். எட்டயபுரம் மகாக்கவி பாரதியார் பிறந்த இடமல்லவா? தமிழ் வளர்த்த வள்ளல் எட்டப்பர் துரோகியாக்கப்பட்டார்.  தமிழனைக் காட்டிக் கொடுத்தும், கொள்ளை அடித்தும், கிட்டி போட்டு வசூல் செய்தவன் வீரானாகிவிட்டான் (கட்டபொம்மன்). அவனை வீரானாக்கிய பெருமை தமிழ் மண்ணுக்குத்  (ம.போ.சிக்கு) தான் உண்டு.
ஆதியில் எட்டயபுரம் அரசருக்கு உரிமையாக இருந்தது செக்காரக்குடி கிராமம். அங்குள்ள வேளாளர்கள் செழிப்பாக இருந்து வந்தனர். அவர்களை அடக்க எண்ணினார் எட்டயபுரத்தார். அப்பொழுது (எட்டயபுரத்தார்க்கு) தமது அடைப்பக்காரனாக இருந்தவன் தான் கட்ரா கட்டப்பிரமையா. அவனது வாரிசுதாரர் கருத்தையா என்ற கட்டபொம்முவை செக்காரக்குடி அனுப்பினார்.  வேளாளர்களை அடக்கியவன், தானே அங்கு பொறுப்பேற்றுக் கொண்டு எட்டயபுரத்தார்க்கு எதிரியாகிவிட்டான்.  அடுத்திருந்தது  வீரபாண்டியபுரம். அங்கு சென்றான். வீரபாண்டிய மன்னனிடம் அடைக்க்கலாம ஆனான். பணியிலும் அமர்ந்து கொண்டான். அவன் வாரிசு இன்றி காலமானதால், அவனுக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை நிறைவேற்றியவன். தானே வீரபாண்டியபுரம் அரசர் என்று பட்டமும் சூடிக்கொண்டான். எனவே வீரபாண்டியபுரம் அரசராக கட்டபொம்மன் ஆகிவிட்டானே தவிர பாண்டியன் அல்ல, பாண்டியன் மரபினனும் அல்ல.
எனவே, தஞ்சமென்று தந்தையிடம் அடைக்கலம் புகுந்த, வீரபண்டியபுரம் கட்டபொம்மனுக்கு அஞ்சேல் என ஆதரவு கொடுத்து தமது உயிரையும் தியாகம் செய்த மறத்தமிழ் மாவீரன் வெள்ளையத்தேவனே தவிர, செஞ்சோற்றுக்காக பிள்ளை புகுந்தவன் அல்ல. தாய்க்குலத்திற்கு துரோகம் செய்பவர் மறவர் மக்கள் அல்ல என்பதை நாடே அறியும்.

நன்றி :  http://thevar.co.in/
 
 
 
 
.....

பாவாணர் யார்?

தமிழகம் மட்டுமல்ல, தமிழுலகு போற்றும் நுண்மான் நுழை புலம் பெற்றவர் பாவாணர். தனித்தமிழ்   வேர்ச்சொற்களை அமைத்தவர். வித்தக விற்பண்ணர் . இன்றைய இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியனார், மொழி ஞாயிறு என்று சிறப்பிக்கப் பெற்றவர். முழுப்பெயர் தேவநேயப் பாவாணர் என்பதாகும்.
தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அவர்கள் வரலாறு எழுதப்பட்டது. – “மறைமலை அடிகளார் வரலாறு” மகன் திருநாவுக்கரசு பக்.862 செய்தி.
அதில் அடிகளாருடன் தொடர்பு கொண்ட புலவர்களை எழுதிகின்ற பொழுது மொழி ஞாயிறு பாவாணர் பெயர் இடம் பெறுகிறது:- “வித்துவான் தேவநேயப் பாவாணர் ஏன்.ஓ.எல். மொழித்துறை வாசகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்”
இவர் பழந்தமிழ் அரிசன மரபினர். திருநெல்வேலி சீமையில் கிருத்தவ சமயம் புக்கவர். வடசொற்கள், தமிழ்ச் சொற்கள் ஆராய்ச்சியால் மாற்றிய அறிஞர்….! அடிகள் பால் அளவிறந்த அன்பும், மதிப்பும் பூண்டவர்” என்று இருக்கிறார்.
சொல்லுகிறார் பாவாணர்:
“நான் சங்கர நயினார் கோயில் (முத்துச்சாமித் தேவர் மகன்) ஞான முத்தனுக்கும், பரிபூரணம் அம்மையாருக்கும் பத்தாம் மகவாகவும் நாலாம் மகனாகவும் 07.02.1902 அன்று வெள்ளி மாலை பிறந்தவன்.
சைவசித்தாந்தக் கழகம் ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை அவர்களுக்குப் பாவாணர் 02.11.1960 ல் எழுதிய கடிதம். “என்னையும் கேளாது மடைத் திருநாவுக்கரசு என்னை அரிசன் என்று எழுதி இருக்கிறது, நான் புத்தகத்தைப் பாராததினால் இதுவரை தெரியவில்லை. திருநாவுக்கரசு மடைத்தனமாக எழுதினாலும், தாங்கள் எப்படி வெளியிடலாம்? நான் என்றேனும் எங்கேனும் என்னை அரிசன் என்று சொன்னது அல்லது எழுதியதுண்டா? – பாவாணர் கடிதங்கள் – சைவ சித்தாந்த நூற்பதிப்பு – ஒரு பகுதி (தொகுப்பு – இலக்கியச் செல்வர் இரா.இளங்குமரன்)
பாவாணர் மறுப்புரை:
சென்ற நூற்றாண்டில் நடுப்பகுதியில் கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் (சங்கரன் நயினார் கோயில்) இடையில் தூக்கக் (Storkes) என்ற மேனாட்டு கிருத்தவ குரவர் தொண்டாற்றி இருக்கிறார். அவர் வளமனைக் காவற்காரராக இருந்தவர் முத்துச்சாமித் தேவர். அவர் மனைவியார் வள்ளியம்மாள். அவ்விவிருவரையும் கிருத்துவராக்கி இருக்கின்றனர் அத்துரைமகனார். அவ்விருவருக்கும் பிறந்தவர் தான் என தந்தை.
என தந்தை பிறந்த சிறிது நாட்களில் பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். அத்துரையே எடுத்து வளர்த்து ஞானமுத்து தோக்கக் எனப் பெயரிடத் சொக்கம்மா என்ற பெண்ணை மரியாள் எனப் பெயர் மாற்றி உரிய பருவத்தில் மணமும் செய்து வைத்திருக்கிறார். அவ்வம்மையார் கூடி வாழாது ஈழத்திற்கு ஒடிவிட்டாள். உண்மைக் கிருத்துவரானதினால் கோவில்பட்டிப் பாண்டவர் மங்கலத்தில் ஓதுவராக (உபதேசியாக)  இருந்த குருபாதம் என்பவற்றின் மகளாகிய என அன்னையாரைப், படிப்பு பற்றியும் குல வேற்றுமை காட்டாமை பொருட்டும் மணந்து கொண்டார். 7ம்  எட்வர்டு இளவரசராக இருந்த காலத்தில் என அன்னையார் சாரா-டக்கர் கல்லூரியில் 3ம் தரம் படித்தரம்  (III Grade)…… தேறியவர்.
என தந்தையார் சன்கரன் கோயிலில் கணக்காயர் வேலை பார்த்தார். அங்குதான் நான் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. என தாயாருக்கு சொந்தமான இராசநாயகத் தேவர் பணவிடலியில் இருந்து அடிக்கடி வந்து போவார். எங்கள் வீட்டில் தங்கி விருந்துன்பார். உள்ளூரிலும் 3கல் தொலைவிலுள்ள களபபாளங்குளத்திலுள்ள குலச்சியரும், இளைஞரும் என தந்தையாரிடம் பயின்றனர். என தந்தையார் கணக்காயராக இருந்த பள்ளி தாழ்த்தப்பட்ட மக்கட்கேண்டு ஏற்பட்டதுதான். சங்கரன் கோயில் எனக்கு உறவினர் ஒருவரும் இல்லை. என அன்னையர் வழியை நோக்கி அங்குள்ள பள்ளக்குடிப் பிறந்த என உறவினர் அல்லாத நெடுஞ்செழியன் என்னும் சிறுவன் அல்லது இளைஞன் என தந்தை வழியை அறியாமல் பெருமைக்காக என்னை தன இனமென்று திருநாவுக்கரசிடம் சொல்லி இருக்கிறான். அதை நம்பி….!
தமிழன் என்று தலை நிமிர்ந்து மார்தட்டும் வீரரும் மிடுக்கும் எனக்கு இருக்குமளவு சோ.சு.பாரதியாருக்குக் கூட இருந்தது இல்லையே. அங்ஙனம் இருப்பவும் என்னை அரிசன் என்று எங்ஙனம் குறிப்பிடலாம்? இன்றிருக்கும் தமிழரெல்லேருள்ளும் உயர்ந்தவனாகக் என்னைக் கருதிகிறேன். தாழ்த்தப்பட்டவன் என்று தமிழ்ச் சொல்லால் குறிப்பதே தவறு. அதிலும் வடவர் ஒருவர் (காந்தி) புணர்ந்த அரிசன் (ஹரிஜன்). மலல்மகன் என்னும் வரசொல்லாற் குறிப்பது. தந்தையார் வரலாற்றைத் தவிர வேறெதையும் எழுதத் தெரியாத மடைத் திருநாவுக்கரசை உடனி அழைத்து இம்முடங்கலைக் காட்டுக. மறைமலை அடிகளார் வரலாற்றிலும் என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிக. … …   …  … மடைத் திருநாவுக்கரசால் எனக்கொரு புகழும் வேண்டியதில்லை. என் தொண்டை இரண்டொரு ஆண்டில் உலகறியும். என்னைப் பற்றிய பகுதியைக் கிழித்தெறிய இயலாவிடில் அரிசன் என்று குறிப்பிட்டுள்ள தொடர் முழுவதையும் காரச்சு மையலால் மறைத்துவிடுக.
என் தந்தையார் 1906ம் ஆண்டிலும், என அன்னையார் அதன் பின்பும் இறந்து போயினர். என தந்தையார் உயிரோடிருந்த போதே தம் தெய்வப் பற்றில் தந்தையார் குலத்தை மறந்துவிட்டதானாலும், அவர் இறந்து அரை நூற்றாண்டிற்கும் மேலாகிவிட்டதினாலும், அவர் முன்னோரைப் பற்றி இன்று பலருக்குத் தெரியாது.
எனவே, ஒருவர் வாழ்நாளிலேயே அவர்தம் மரபு பெருமைகளை அழிக்கப்பட்டு வரும் போது, மறைந்த தமது முன்னோர்கள் வரலாறு முழுமையாக மாற்றப்பட்டு வருகிறது என்றால்…….. வியப்புடையத்தன்று.
மான மறக்குல மக்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு உரிமைப் போராட்டத்துக்காக அருஞ்செயலாற்றி, உயிர் நீத்த தியாக வீரர்கள் வரலாற்றையும், அவர்கள் முழங்கிய தாரக மந்திர மொழிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வைர மணிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது தெளிவான விளக்கங்களுடன். நீண்ட நாட்களாக எமது நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருந்த பணி ஒருவாறு நிறைவேறியது.
என்றாலும் கூட இன்னும் ஏராளமான வரலாறுகள், பழம் பாடல்கள் கும்மிகள் இருந்தும் பலருக்கும் தெரிந்தும் ஏனோ எடுத்துக்காட்ட முன்வரவில்லை. எனவே தான் உமையான வரலாறுகள், நிகழ்ச்சிகள் மறைக்கப்பட்டு வருகின்றது. விரைவில் புகழ் தேடிக் கொள்ள வேண்டும் என்று வரலாற்று பெருமைகளை சிதைத்துவிட துணிவு கொண்டுள்ளது துரோகச் செயல்.
மாவீரர்களேல்லாம் நினைவோ, நினைவு மண்டபன்களோ இல்லை. எழுப்பவும் எவரும் முன் வரவும் இல்லை. என்றாலும் கூட காற்றும் மண்ணும் அவர்கள் வாழ்ந்த நிலத்தையே நினைவுச் சின்னமாக நம் மனக்கண் முன்னாள் காட்சியளிக்கின்றன. பேசுகின்றன. இனியாகினும் வீரர்கள் வாழ்வை எண்ணித் தலைவணங்கி அஞ்சலி செய்ய ஆணை செய்வோமாக.  தவறினால் ஈவிரக்கமற்று தண்டித்து விடும் எதிர்காலம்.


 நன்றி: http://thevar.co.in
 
 
 
 
....