பாண்டியனுக்கு பின்னால் தேவர் என்று போட முடியுமா..?

பாண்டியன் என்ற பெயருக்கு பின்னால் தேவர் என்று போடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பல நாட்கள் நிலவி வந்தாலும், எங்களது ஊரில் உள்ள பிரபலமான சிவாலயத்தில் உள்ள கல்வெட்டின் ஆதாரத்தின்படி பாண்டியன் தேவர் என்று அப்போதிலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.அந்த கல்வெட்டில் "ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு யாண்டு" என்ற மெய் கீர்த்தியும் காணப்படுகிறது.


அப்போது அந்த ஊரின் பெயர் "மாணிக்க வள நாடு" என்பதும்,மாணிக்க வளநாட்டின் குறுநில அரசர்/ சிற்றரசர் "ஆதித்தாழுடையார்" என்பதும்,அப்போதைய மன்னர் "ஸ்ரீ சுந்தர பாண்டியர்" என்பதும் அந்த கல்வெட்டின் மூலம் எனக்கு தெரிய வந்தது.அந்த சிவன் கோயிலின் மூலவர் பெயர் 'தேவபுரிஸ்வரர்' என்று சம்ஸ்கிருத பெயரில் இன்றைய காலக்கட்டத்தில் வழங்கி வருகின்றனர்.ஆனால் அந்த கல்வெட்டில் தமிழில் "அழகிய மணவாளன்" என்றே தமிழ் பெயராக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்தது.
ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு

No comments:

Post a Comment