தேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 102ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு உருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரியசாமி, தங்கம் தென்னரசு, தமிழரசி, மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மு.க.அழகிரி பசும்பொன் புறப்பட்டு சென்றார். அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் துரைபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. வளர்மதி ஜெபராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். ம.தி.மு.க. சார்பில் பொது செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராம் பாபு, உள்பட பலர் பங்கேற்றனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நன்மாறன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், அகில இந்திய பார்வர்டு பிளாக் (சந்தானம் பிரிவு) சந்தானம் தலைமையிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
---
நன்றி : http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=tamilnadu&article=13734

No comments:

Post a Comment